- Friday
- April 17th, 2026
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில்,36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நயினாதீவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்று முன்தினம் (13.06.2023) இரவு இரண்டு பெண்கள் வசித்துவரும் வீட்டில் அவர்கள் உறக்கத்தில் இருந்த போது வீட்டுக் கூரையை உடைத்து வீட்டில் இறங்கிய திருடர்கள் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை...
கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் சிக்கி முன்பள்ளி சிறுவர்கள் 11பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று புதன்கிழமை காலை முன்பள்ளிச் சிறுவர்களை அதிகளவில் ஏற்றிக்கொண்டு பயணித்த முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம்...
விபத்துக்களில் சிக்கி மூளைச்சாவடைந்தவர்களின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன் வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் கேட்டுக்கொண்டார். சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம் பெறவுள்ள கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், திடீரென ஏற்படும்...
மருதங்கேணி விவகாரம் குறித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மேலும் சில உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளீர் அணித் தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோரே விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்க்கு வருமாறு பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது.
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை கையளித்தனர். யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து நேற்று (13) காலை கலந்துரையாடினர்....
இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இடம்பெற்ற விபத்துகளில் மோட்டார் சைக்கிள்...
தனியார் துறையினரால் சுமார் 8 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அச்சடிக்கும் இயந்திரங்களின் திறன் குறைபாடு காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான...
இந்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் சாந்தனின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் உள்ளிட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர். முதலில் பேரறிவாளன்...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303 ரூபாய் 73 சதமாக பதிவாகியுள்ளது. இதேநேரம் கொள்வனவு விலை 290 ரூபாய் 06 சதமாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதேவேளை கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 228 ரூபாயாகவும் கொள்விலை 215 ரூபாயாகவும்,...
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸை தமிழ் தேசய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது,வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய...
இலங்கையின் LGBTQ சமூகத்தினருக்கு உறுதியான ஆதரவை வழங்குவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சுயமரியாதை பவனி குறித்து தமிழ்தேசியமக்கள் முன்னணயின் ஆதரவாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிடடுள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய மக்கள் இதனை தெரிவித்துள்ளது. எங்கள் கட்சியின் உறுப்பினரான நபர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் நிச்சயமாக இந்த விடயத்தில் எங்கள்...
காரைநகரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் திங்கட்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி தப்பிச்செல்ல முற்பட்டபோதே யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் திகதி காரைநகர் ஊரி பகுதியில் விசேட...
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்தார். தினசரி நடவடிக்கைகளில் இருந்து ஓய்வு எடுப்பதன் மூலம் தனிநபர்கள் போதுமான...
வீடுகளில் அல்லது வணி நிறுவங்களின் டெங்கு நுழம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அதற்கான அபராதம் விதிக்கும் நடைமுறை அடுத்தவாரம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. சமீப வாரங்களாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறன்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இதுவரை 43...
கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (11) பொலிஸ் விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 09 அட்டைகளில் 90 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் மீட்கப்பட்ட மாத்திரைகளையும் , கைது செய்யப்பட்ட நபரையும் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
மின் கட்டண திருத்தத்திற்கமைய, மீண்டும் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பிற்கமைய, 0...
வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது...
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட...
சென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயான 100 வது விமானசேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனாத் தொற்று இடர்காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானசேவைகள் பின்னர் 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையானது...
Loading posts...
All posts loaded
No more posts
