- Monday
- June 9th, 2025

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக மக்கள் எழுச்சி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்கான சேவைகள் என அவர் கூறியுள்ளார். பிரச்சினைகள் தீவிரமடைந்தால் மட்டுமே அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் தீர்வுகளை தேடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்....

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால்...

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்....

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாயினை முன்மொழிந்திருந்தது. அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார...

யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலரே இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாக அவரது ஊரவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உடனடியாக...

தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வட மாகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்குமான ஒரே ஒரு போதனா...

இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெட்ரோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்துள்ளார். நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் நேற்றைய தினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய்/வேப்பெண்ணெய்,...

நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீர்க்கப்படாத பிரச்சினை சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் தவறவிட்ட பல வரலாற்று...

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.இது அரசிதழில் வெளியிடப்பட உள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டவரைவில் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நேற்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரைவு பல தடவைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் மற்றும்...

பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அனைத்து மின்சார விநியோக சேவைகளைளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும்...

இன்று (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்ததினத்தை முன்னிட்டு கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் மற்றைய நுழைவாயிலையும் நிதி அமைச்சின் நுழைவாயிலையும் இடைமறித்து கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து குறித்த ஆர்ப்பாட்ட்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சுமார் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 அன்று பெட்ரோல் மற்றும் ஜூன் 24 அன்று டீசல் இறக்குமதிக்காக...

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 7 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச் சென்ற படகு இந்தியாவின் தமிழகம் தனுஷ்கோடி ஒன்றாம் தீடையில் இறக்கிய...

"நான் 87ம் ஆண்டு சொன்னதனை கேட்டிருந்தால் பிரபாகரன் அடங்கலாக இவ்வளவு அழிவுகள், இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் வந்திருக்காது" என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாணங்களிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை என தமிழ்த்தரப்புக்கள் தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறான முயற்சிக்கு மத்திய...

தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் புதிய சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஏற்படப் போகும் உணவுத் தட்டுப்பாட்டுக்குத்...

உலக உணவுத்திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 66 சதவீதமானோர் நாளாந்தம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதன் விளைவாகப் பல்வேறு சமூகப்பிரச்சினைகள் தோற்றம்பெற்றுள்ளன. அந்தவகையில் உணவுப்பாதுகாப்புத் தொடர்பில் உலக உணவுத்திட்டமும் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைந்து கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ச்சியான ஆய்வினை...

இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் எரிவாயுவை ஏற்றிய இறுதி கப்பல் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலில் இருந்து 40,000 மெட்ரிக் தொன் டீசல் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. எவ்வாறிருப்பினும் இன்று நாட்டை வந்தடையவுள்ள கப்பலிலுள்ள டீசலை விநியோகம் செய்வதற்கு இன்னும் 03 நாட்கள் செல்லும் என இலங்கை...

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச அலுவலகங்களுக்கு வாராந்தம் வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) இரவு வெளியிடப்படவுள்ளது. அரச சேவைகள், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய...

40 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நாளையதினம் (வியாழக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். எனினும் அந்தக் கப்பல் மூலம் கொண்டுவரப்படும் எரிபொருளை, மின்சாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க...

All posts loaded
No more posts