க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பரீட்சை அடுத்த மாதம் 8ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 3 இலட்சத்து 15 ஆயிரத்து 27 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நிலையில், இதில் 2 இலட்சத்து 37...

எதிர்காலத்தில் ஆசிரியர் உதவியாளர்கள் பதவிக்கான நியமனம் வழங்கப்படாது

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்ற போது எந்த காரணம் கொண்டும் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியமனம் வழங்கப்படமாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113...
Ad Widget

க.பொ.உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பிவைப்பு

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு இந்த வருடம் தோற்றுவதற்கான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம டபிள்யூ எம் என் ஏ .புஸ்பகுமார இது தொடர்பாக தெரிவிக்கையில் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் , தனியார் பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அவர்களது...

10 வருடத்தை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்

ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரே பாடசாலையில் பல வருடங்கள்...

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை!

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை செய்யப்படும் என்று வட.மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார். வவுனியா, தோனிக்கல் முத்து மாரியம்மன் ஆலய அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கு கொண்டு உரையாற்றும் போதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “ஞாயிற்றுக்கிழமைகளிலே தனியார் கல்வி நிறுவனங்கள்...

உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் 08ம் திகதி முதல்

இம்முறை கபொத உயர்தரப் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. நாடு பூராகவும் 2230 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற உள்ளதாக இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சைக்காக 315227 பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளனர். இதேவேளை தரம் 05...

பொய்க்கடிதங்களை வழங்கிய அதிபர், வலயப்பணிப்பாளர்கள் மீது விசாரணை!

வடக்கு மாகா­ணத்­தில் தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­றா­த­வர்­களை, தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­று­கின்­ற­னர் என்று போலி­யான உறு­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கிய பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும், அதனை உறு­திப்­ப­டுத்­தி­ய­வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர். விரை­வில் இந்த விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண க் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன் தெரி­வித்­தார். தகு­தி­யற்ற தொண்­டர்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கிய அதி­பர்­க­ளுக்­கும் அதனை...

பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான உடைகளை அணியலாம்

நாட்டில் டெங்கு நோய் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான உடைகளை அணிந்து பாடசாலைக்குச் செல்லலாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வியமைச்சு இன்று (புதன்கிழமை) விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் தம்மை தாக்காதவாறு உடம்பை முழுமையாக மறைக்கும் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியுமாறு...

மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தவதில் ஆசிரியர்களும்,அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தவதில் ஆசிரியர்களும்,அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் தீவக வலய பாடசாலைகளுக்கான E Learning கற்றல் இறுவட்டுக்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் தீவக வலய அதிபர்கள்,கணித,விஞ்ஞான ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் தொடர்ந்து...

பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம் 7ம் திகதி வரை இந்தக் கால எல்லையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, 2016/ 2017ம் கல்வி ஆண்டுக்காக...

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்: கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கான உத்தேச காப்புறுதி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தெரணியகல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த காப்புறுதி திட்டத்தை இதற்கமைய அடுத்த இரண்டு மாதத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நோய் வாய்ப்பட்டால் அரச வைத்தியாசலை...

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுமதி!

கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்ற புதிய மாணவர்கள், இம்மாதம் 20ம் திகதி உள்வாங்கப்படவுள்ளதாக ஆசிரியர் கல்விப் பிரதம ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 303 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்த விடயம்...

தரம் 7 புவியியல் புத்தகங்கள் விஷ இரசாயனத் தாளில் அச்சடிப்பு: மீளப் பெறுமாறு வலியுறுத்தல்!

தரம் 7 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகம் விஷ இரசாயனத் தாளில் அச்சிடப்பட்டுள்ளதுடன், அது மாணவர்களின் சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கவல்லது எனவும், அவ்வாறு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட தரம் 7 புவியியல் புத்தகத்தை மீளப் பெறுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று...

அதிபரின் தண்டனையால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு தண்டனை வழங்கியமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட...

பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைக்க விசேட திட்டம்

பாடசாலை பிள்ளைகளின் உடல் பருமனைக் குறைப்பதற்கு விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெறும் மரணங்களில் 59 வீதமான மரணங்கள் தெற்றா நோய்களினால் ஏற்படுகின்றது எனவும் மாரடைப்பு, உயர் குருதியழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களினால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதியளவு உடற்பயிற்சி மேற்கொள்ளாமையே...

பல்கலை அனுமதிக்கான Z Score வௌியீடு

2016/2017ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் (Z-Scores) வௌியிடப்பட்டுள்ளன. www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

தேசிய கல்வியல் கல்லூரிக்கான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

2016ம் ஆண்டில் தேசிய கல்வியல் கல்லூரிக்கு தகுதி பெற்ற விண்ணப்பதார்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைவாக 2016ம் ஆண்டு தேசிய கல்வியல் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்காக தகுதி பெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர் பட்டியலில் www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்....

கருத்தமர்வு எனக்கூறி மாணவியை அழைத்துசென்ற ஆசிரியரால் பரபரப்பு!

கிளிநொச்சி கண்டாவளைக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரம் கல்வி பயிலுகின்ற மாணவியை கருத்தமர்வு எனக்கூறி அப்பாடசாலையில் கணிதபாடம் கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த மாணவிக்கு மட்டும் செயலமர்வு உள்ளது என அழைத்து சென்ற...

நுவரெலியா தொழிநுட்ப கல்லூரியில் தமிழ் மொழிமூல பாடநெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் அதிகளவானோர் தொழிலுக்காக எம்மை நாடி வருகின்றனர். அத்தகைய மாணவர்கள் தொழில்சார் கல்வியை கற்றால் மாத்திரமே தொழில் வாய்ப்புகளைப் பெறமுடியும். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஒரே தொழிநுட்ப கல்லூரியில் போதுமான இட வசதிகள் இருந்தும் சுமார் 500 மாணவர்கள் பயிலும் கல்லூரியில் வெறும் 15 தமிழ் மொழிமூல மாணவர்களே...

இயற்கை அனர்த்தம்: எட்டு மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு பூட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை இரத்தினபுரி, கேகாலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டுள்ளன. அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts