O/L சித்தியடையாதவர்களும் A/L படிக்கலாம்!

இந்த வருடத்திலிருந்து க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களும் உயர்தரத்தில் கல்வி கற்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நான்கு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு 13 வருடங்களுக்கு தொடர்ச்சியாகக் கல்வியை வழங்குவதே இதன் நோக்கம் எனவும் கல்வி அமைச்சின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த வருடத்திலிருந்து...

தரம் 5 பரீட்சையில் சிக்கல், உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்கவும் : கல்வி அமைச்சர்

இவ்வருடம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாளிலுள்ள வினாவில், சிக்கல் காணப்படுவதாகவும் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளரிடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார். கணித வினாத்தாளில் இரண்டாம் பகுதியில் 39 ஆவது வினா தொடர்பான விடையில் சிக்கல் காணப்படுவதாக விசனம்...
Ad Widget

பாடசாலை செல்லாத சிறுவர்களை தேடி பிடிக்க நடவடிக்கை!

பாடசாலை செல்லாத சிறுவர்களை மீண்டும் பாடசாலையில் சேர்க்க விஷேட குழுவொன்று நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அம்பகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட அவர், அந்நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த செயற்திட்டத்தின் ஊடாக பாடசாலைக்கு மாணவர்கள்...

6ஆம் வகுப்பிற்கு மேல் சகல மாணவர்களுக்கும் மடிக்கணனி

6 ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்கும் சகல மாணவர்களுக்கும் மடிக் கணனி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.காலி பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாணவன் ஒருவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை

உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...

யாழில் சிங்கள பாடசாலையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

யாழில் 512ஆவது படைமுகாம் அமைந்துள்ள சிங்கள பாடசாலையினை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென சர்வமத குழுவின் செயலாளர் வணபிதா டானியல் டிக்சன், அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அஸ்கிரிய மகாநாயக்க தேரர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சர்வமத குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, இந்துமத குருமார்கள், ஓய்வூதியம் மற்றும்...

வெளிநாடுகளில் கல்விகற்க வடக்கு, கிழக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 9 மாணவர்களுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. திகுவி கல்விச் சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ். ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வடக்கு மாகாண முதலமைச்சரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன்...

உயர்தர பொது அறிவுப் பரீட்சை திகதி மாற்றம்!!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பாடத்துக்கான பரீட்சையை, 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு, கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது என, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் 2ஆம் திகதி, முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால், அன்று இடம்பெறவிருந்த மேற்குறிப்பிட்ட பாடத்துக்கான பரீட்சையைப் பிற்போடுமாறு,...

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களின் பதவி ஒரு வாரத்தில் பறிபோகும்? : ஆளுநர் ​றெஜினோல்ட் குரே

வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதலளிப்பதாக, வட மாகாண ஆளுநர் ​றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடமாகாண ஆளுநருக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு...

பரீட்சைக்கு முன்பு வினாத்தாளை வௌியிடவில்லை : கல்வியமைச்சு

குற்றம் சுமத்தப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் இரசாயனவியல் வினாத்தாள் துண்டுப்பிரசுரத்தை பரீட்சைக்கு முன்பதாக வௌியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கம்பஹா பகுதியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய ஆசிரியர் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம்: ஆசிரியரிடம் விசாரணை

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியதாக கூறப்படும் இரசாயனவியல் வினாப்பத்திர வினாக்கள் மூன்று தொடர்பில் விசாரணை நடாத்துமாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. உதவிப் பொலிஸ் அதிகாரியொருவரின் கீழ் இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துண்டுப்...

வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் கிரியெல்ல

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வவுனியா வளாகத்தின் 25ஆவது வருட நிறைவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தரமுயர்த்துவதற்கு பாடுபட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்...

பாடசாலை மாணவர்களுக்கான சப்பாத்து, சீருடைக்கான வவுச்சர் அடுத்த மாதம் 15ம் திகதி!

அடுத்த வருடம் வழங்கப்படவுள்ள பாடசாலை மாணவர் சீருடைக்கான வவுச்சர் உதவித்தொகை அடுத்த மாதம் 15ம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இம்முறை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சப்பாத்துகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களும் வழங்கப்படும் என்றும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்கு நாடாளவிய ரீதியில் பத்து இலட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். நாட்டிலுள்ள தேசிய...

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத சில மையங்களில் மறுப்பு

இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற கல்வி பொதுத் தராதர உயர்தரத் தேர்வில் தோன்றும் முஸ்லிம் மாணவிகள், தங்கள் சீருடையான பர்தாவுடன் தேர்வு எழுதுவதற்கு ஒரு சில தேர்வு மையங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இலத்திரனியல் உபகரணங்கள் பர்தாவிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, பர்தாவைக் கழற்றி விட்டுத் தேர்வு எழுதுமாறு மாணவிகள் குறிப்பிட்ட சில...

தமிழ் வளர்க்கும் “கலைத்திரள்” : மலையத்திலிருந்து மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டி

ஊவா வெல்லச பல்கலைக் கழக மாணவர்கள் நாடாத்தும் "மலைத்தென்றல்" கலை கலாச்சார நிகழ்வின் ஓர் அங்கமாக "கலைத்திரள்" - அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டிகளை நாடாத்துகின்றனர். பாடசாலை ரீதியில் நடைபெறும் இந்தப்போட்டிகளின் ஊடாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கான பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் சானிற்தழ்கள் மலைத்தென்றல் நிகழ்வில் வழங்கப்படும். கட்டுரைப் போட்டிக்கான தலைப்புக்கள்...

க.பொ.த சாதாரண தர மீளாய்வு பெறுபேறு : 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம்!!!

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத்தர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீளாய்வு பெறுபேறு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. www.doenets.lk/exam என்ற இணைய முகவரி ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள் மீளாய்வுசெய்வதற்காக 87,002 விண்ணப்பித்திருந்தனர்.இதில் 953 பேரின் பெறுபேறுகளில் மாற்றம் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 20 ஆம் திகதி 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை!

நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையை முன்னிட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 20 ஆம் திகதி பரீட்சை முடிவடையும் வரையில் செயலமர்வுகள், பகுதிநேர வகுப்புக்கள், மாநாடுகள் என்பனவற்றை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும்...

உ/த பரீட்சை இன்று ஆரம்பம்: 3 பொருட்களுக்குத் தடை

நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்ட, 2,230 பரீட்சை மத்திய நிலையங்களில், 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள், இன்று (08) ஆரம்பமாகின்றன என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த பரீட்சைகளில், 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர், இம்முறை தோற்றவுள்ளனர். அதில், 220 பேர் விசேட தேவையுடைவர்களுக்கான விண்ணப்பத்தாரிகளாவர் என்று, பரீட்சைகள் திணைக்கள...

முஸ்லிம் மாணவிகள் கலாசார உடையுடன் தேர்வு எழுத அனுமதி?

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர தேர்வு எழுதவிருக்கும் முஸ்லிம் மாணவிகளைத் தங்கள் கலாசார ரீதியான சீருடையுடன் தேர்வு எழுதுவது தொடர்பாக, எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதை மத்திய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் கோருகின்றன. இது தொடர்பாக அகில...

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று மூடப்படுகின்றன. மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் திகதி திறக்கப்பட இருக்கின்றன. இதேவேளை நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்பட்டு இம்மாதம் 28ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
Loading posts...

All posts loaded

No more posts