- Saturday
- May 4th, 2024
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இறுதித்திகதி நாளையாகும். இத்திகதி மேலும் நீடிக்கப்பட மாட்டாது எனப் பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் எஸ்.பிரணவதாசன் தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதித்திகதி கடந்த 13 ஆம் திகதியுடன் முடிவடைந்தது என்று குறிப்பிட்ட பிரதி ஆணையாளர் நாயகம், கொரோனா வைரஸ் பரவல்...
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2019 டிசெம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மார்ச் 28ஆம் திகதி வெளியிடுவது...
2019/2020 கல்வியாண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர் அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி வரும் ஏப்ரல் 9ஆம் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மாணவர் கையேடுகள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. கையேடுகளில் குறிப்பிட்டுள்ள அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கு இணையத்தின் (Online) ஊடாக விண்ணப்பிக்குமாறு பேராசிரியர் சம்பத் அமரதுங்க மாணவர்களை...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதம் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் தமது வீடுகளிலிருந்தவாறே இணையம் மூலமாகக் கல்வி கற்கும் வகையிலான ஏற்பாடுகளை கல்வியமைச்சு ஆரம்பித்திருக்கிறது. இதுகுறித்து கொழும்பிலுள்ள...
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கம் அறிவித்துள்ள விசேட விடுமுறை காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படக்கூடும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக எழுந்துள்ள அச்சநிலையைத் தவிர்க்கும் வகையில் அனைத்து அரச பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி மூடப்படுவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார். அதன்படி நாளை 13ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சை...
நாளை முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல் பிற்பகல் 2 மணிக்கு வௌியிடப்படும் என கல்வி அமைச்சின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க பாடசாலைகளில் எதிர்வரும் காலங்களில், முதலாம் தவணைப் பரீட்சையை நடத்துவதில்லையென கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய அரசாங்க பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சை 2021 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் பாடசாலை தவணை காலத்தில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ளக விளையாட்டு, கல்விச் சுற்றுலா, கண்காட்சி, கிரிக்கெட் போட்டி மற்றும்...
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட அதிபர், ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய அவர்கள் நாளை (புதன்கிழமை) இவ்வாறு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிகாரிகளினாலோ அல்லது வேறு வகையிலோ அச்சுறுத்தலேனும் அதிபர்,...
பகிடிவதையானது சமூக வலைத்தளங்களில் வெளியானவாறு பாலியல் ரீதியில் புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் எவையேனும் கண்டறியப்படவில் என யாழ். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சில சமூக ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த விசாரணைக்குழு அதனது அதிகார வரம்பினுள் ஆராய முடியவில்லை. அதனால் இவற்றை ஆராயுமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக...
பல்கலைக்கழகக் கற்கை நெறிகளை பகிடிவதையின் காரணமாக இடையில் கைவிட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீளவும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொடுக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை மேற்கொள்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அந்தவகையில், இக்குழுவிற்கு பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் நித்தியானந்தன் மாதவன், சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட கூகுள் கோட் இன் – 2019 ( Google Code-In 2019) போட்டியில் ஒரு பிரிவில் முதலிடத்தை (Grand Prize Winner பட்டம்) பெற்றுள்ளார். இவருக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் ஜூன் மாதம் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில்...
தற்போது நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிகளச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சு கல்வி அமைச்சிற்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இந்த பிரச்சினைகளில்...
கணக்கியல் தொடர்பான பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கணக்கியல் தொடர்பாக க.பொ.த.உயர்தர பிரிவில் பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளது. அரச சேவைக்கான கணக்கியல் துறைசார் பரீட்சைகள் எதிர்வரும் 16 ஆம், 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 14 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 13 உறுப்பினர்கள் அடங்கலாக 27 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்...
கொரோனா வைரசில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதகாப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுஙைகள் தொடர்பில் அனைத்து மாகாண, வலய மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கும், தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வூஹான் மாநிலத்தில் காணப்பட்ட இந்த வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவிவருகின்றது. இந்த வைரஸ் இதற்கு முன்னர்...
இடைநிறுத்தப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்த்தன இனை அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட விரிவுரையாளர்களுடன் நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக அமைச்சர் பந்துல...
மகாபொல புலமைப் பரிசில் நிதியத்திற்கான புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணையகத்தளத்தின் முகவரி www.mahapola.lk என்பதாகும். இதுதொடர்பான நிகழ்வு தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் பந்துல குணவர்த்தன இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று முதல் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் சகல தகவல்களையும் இணையத்தளத்தில்...
புதுக்குடியிருப்பு- வேணாவில் பாடசாலை அதிபா் இடமாற்றம் செய்யப்படவேண்டும். எனக்கோாி பெற்றோா் இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் நடாத்தியிருக்கின்றனா். பாடசாலையின் அதிபா் முறையற்ற விதத்தில் செயற்படுவதாக தெரிவித்தே அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், குறித்த பாடசாலையின் அதிபா், பெற்றோர்களிடம் சாதியம் பேசுவதுடன், இழிவாகவும் தரக்குறைவாகவும் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும். அத்துடன் பாடசாலை மாணவர்களின்...
மஹபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு 7000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்களுக்கு 5000 ரூபாய் மாதாந்திர கொடுப்பனவு வளங்கப்படுவதாகவும் இது பல்கலைக்கழக விடுதியில் தங்கும் அவர்களின் செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அந்தவகையில் ஒவ்வொரு மாதமும்...
Loading posts...
All posts loaded
No more posts