Ad Widget

மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று!

மாற்றங்களுடனான புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. உட்பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக தொடர்ந்து தாமதிக்கப்பட்டுவந்த அமைச்சரவை மாற்றமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, மாற்றங்களுடனான புதிய அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதேவேளை, புதிய அமைச்சரவை மறுசீரமைப்புடன் ஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரித்தான பொறுப்புக்கள் விரைவில்...

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி உனா மக்கோலி திடீர் மரணம்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிவந்த உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர...
Ad Widget

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் : சம்பந்தன்

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதிப்பதாகவும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட் பைசென்ஸேனிஸ் ஆகியோருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை)...

குண்டு வெடிப்புக்கு இராணுவ வீரர் காரணம்?

தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு இராணுவ வீரர் ஒருவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த மூன்று ஆசன வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும், அதன் நடுவிலிருந்தவர் எழுந்தபோதே குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் உயர்...

கூட்டமைப்பு எம்.பிக்களின் இலஞ்ச விவகாரத்தால் சபையில் சலசலப்பு!

2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது. இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார்....

வாசு­தேவ நாண­யக்காரவின் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்த சுமந்­திரன்!

பிணை­முறி அறிக்கை குறித்து சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து செயற்­பட்­டன இது திட்­ட­மிட்ட சதி­யென கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்கார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்­வைத்த கோரிக்கை நியா­ய­மா­னது, சட்ட விதி­மு­றைக்கு ஏற்­ற­தா­கவே அமைந்­துள்­ளது என்று குறிப்­பிட்ட கூட்­ட­மைப்பின் எம்.பி. சுமந்­திரன் வாசு­தேவ...

கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் இணைக்கப்படவுள்ள சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்கள்

மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள்...

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகா : ராஜித

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார். மேலும், அவருக்கான நியமனம் இன்று வழங்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்துவரும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள்...

யாழ் -பண்டாரவளை பஸ்ஸில் தீ விபத்து : 12 இராணுவ வீரர்கள் உட்பட 19 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து பண்டாரவளைக்குப் பயணித்த தனியார் பஸ் தீவிபத்துக்குள்ளாகியதில் 19 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 12 பேர் இராணுவத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது. தியதலாவ, கஹகொல்ல என்ற இடத்தில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. “பஸ்ஸில் திடீரென ஏற்பட்ட தீயால் விபத்து இடம்பெற்றது. அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. படுகாயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்”...

தாமரை மொட்டிலிருந்து அமைதியே மலரும்: தந்தையை எச்சரித்த சம்பந்தனிற்கு நாமல் பதில்!

தாமரை மொட்டிலிருந்து அமைதியும் இணக்கமும் சுபீட்சமுமே மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், கட்டாயம் தமிழீழம் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்ததன் பின்னணியில் நாமல் இந்த கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து நாமல் தனது...

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை பெற்றுத் தருவேன்....

மஹிந்தவுடன் இணையும் மைத்திரி?

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு தீர்வுகாணும் முகமாக விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மைத்திரியை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டே மஹிந்த ராஜபக்ஷ குறித்த அழைப்பினை விடுத்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

நான் பதவி விலக அவசியமில்லை : பிரதமர் ரணில்

அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய அரசாங்கமொன்றில் பிரச்சினைகள் நிலவுவது சாதாரண விடயம் எனவும் இரண்டு தலைவர்கள் இருப்பதனால் நல்லாட்சி பயணத்திற்கு பாதிப்பு இல்லை...

தாதியொருவரை கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை தொடர்பில் இரானுவத்தினரின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி கைது!

கொழும்பின் முன்னணி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தமை தொடர்பில் கப்டன் தர இராணுவ அதிகாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஏற்கனவே மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கப்டன் தரத்தை உடைய மற்றொரு அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இரானுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின்...

மகிந்த எமக்கு எதிரியில்லை ! அவர் நல்ல தலைவர் !! சேர்ந்து பணியாற்ற சம்பந்தன் அழைப்பு !!!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை. இந்த ஒத்­து­ழைப்பை அவர் நல்­க­வேண்டும் என்று, தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும்...

ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயார்- சுமந்திரன்

புதிய தேர்தல் முறையின் காரணமாக உள்ளூராட்சி சபைகளில் எந்தவொரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெறுவது கடினமானதாக மாறியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், அங்கு ஆட்சியமைக்கும் எந்தவொரு கட்சிக்கும் வெளியிலிருந்து ஆதரவளிக்க...

பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை : ராஜித

பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தமைக்கு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உள்ளுராட்சி மன்ற தேர்தல்...

ஈழம் சிறிதாகிவிட்டது- மஹிந்த

வடக்கு- கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் ஈழம் சிறியதாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், இத்தேர்தலின் மூலம்...

நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லை : மஹிந்த

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்...

“தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி “

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி...
Loading posts...

All posts loaded

No more posts