- Friday
- July 18th, 2025

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக மக்கள் யாரும் அச்சுறுத்தப்பட்டிருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் ஊடாக முறைப்பாடு கொடுங்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த மாகாணசபை உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கத்திடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள்...

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அரைநாள் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறும், கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த நிலையில், உயர்தரத்துக்கான கல்வியைத் தொடர்வதற்காக, வேறு பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அம்மாணவர்களிடம் இருந்து,...

அரச முகாமைத்து பதவி III க்கான போட்டிப் பரீட்சை 2012 (1) - 2016(2017) பரீட்சை எதிர்வரும் 20 ம்திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ. எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை எழுதுவதற்கு 8877 பேர் தகுதிபெற்றுள்ளனர். கொழும்பு உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. அனைத்து...

அனாமதேய ஆபத்து மிகுந்த மின்னஞ்சல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. WannaCry எனப்படும் கணினி பொறியை சீர்குலைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களில் இருந்து பாதுகாக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்: - Update Windows Patches - விண்டோஸ் பெச்சஸ்களை மேம்படுத்திக்கொள்ளவும். - Backup all documents...

தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதால் பெற்றோர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்கள்,...

வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், பருவநிலை மாற்றங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்று மீளவும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் பறவைகள் வலசைப்...

நாட்டிலுள்ள புராதன, வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது திருத்தப்பட்ட புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்குக் குறையாத தண்டனை பெறும் குற்றச் செயல் என தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படும் ஒருவரின் உடைமைகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் எனவும் அச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படும்...

வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக தற்போது சமூகவலைத்தளங்களில் செய்தியொன்று அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. வீடுகளுக்கு வந்து இலவசமாக இரத்த மாதிரி பரிசோதனை செய்வதாக கூறி எச்.ஐ.வி வைரஸ்ஸை ஊசி மூலம் உட்செலுத்துவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐ.எஸ் தீவிரவாதிகளின் திட்டம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களம் மற்றும்...

பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாட்டில் எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையினால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு இடைஞ்சலும் ஏற்பட மாட்டாது. இதனை முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. இன்று நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு...

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எதிர்வரும் ஐந்தாம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. ‘பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளினால், வைத்தியர்களை உருவாக்கமுடியாது’ என அமைச்சரொருவர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை போக்குவரத்து சபையின் பொதுச்செயலாளர் சேபால லியனகே...

சயிட்டம் நிறுவனம் தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் சுகாதார, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளிலுள்ள தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நிலவுகின்ற வறட்சியான காலைநிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. அதன்படி நாளொன்றுக்கான மின்சார கேள்வி 44 கிகாவோல்ட் மணித்தியாலங்களுக்கும் அதிகமாகும் என்று மின்சார சபை கூறியுள்ளது. இதன்காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன பொதுமக்களிடம் வேண்டுகோள்...

இலங்கை பொலிஸில் பொலிஸ் கான்ஸ்டபிள் / பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் / பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதன்பிரகாரம், விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு பதிவுத்தபாலில் 2017.06.02 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்பதாக விண்ணப்பப்படிவங்கள் கிடைக்கக்கூடியதாக அனுப்பப்படல் வேண்டும். இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களில் தமிழ்...

மாமனிதர் தராகி சிவராமின் (தர்மரட்ணம் சிவராம்) 12 ஆவது ஆண்டு நினைவேந்த்ல் நிகழ்வு இம்முறை கிளிநொச்சி நகரில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏ-9 வீதியின் கிளிநொச்சி பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.ஊடாக அமையத் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடை பெறும் இந்நினைவேந்தல் நிகழ்வில்...

நாட்டில் நிலவுகின்ற ஆகக்கூடிய வெப்பம் காரணமாக, ‘வெப்ப அதிர்ச்சி’ ஏற்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், ஆகையால், பிள்ளைகளை தண்ணீரில் விளையாட விடுமாறும் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வெப்ப அதிர்ச்சி நிலைமையை இல்லாமற்செய்வதற்கு, தண்ணீரைக் கூடுதலாகக் குடிக்கவும் உடலை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் வைத்தியர் அறிவுரை கூறியுள்ளார். விசேடமாக, சின்னப்...

தற்பொழுது நாட்டில் நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைமைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன....

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு, தமிழ் மக்கள் பேரவையும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு நீதி கோரும் வகையில், தமிழ்...

வேமாக பரவிவரும் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார சேவை அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் பல பாகங்களிலும் வேமாக பரவிவரும் இன்புளுவன்ஸா ஏ.எச்.வன்.என்.வன் தொற்று காரணமாக, பல உயிர்கள் காவுக்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்த அறிவுறுத்தல் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், இது குறித்து மக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சுகாதார சேவை பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார,...

பூமி தினமான நாளை சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை செய்யவேண்டும். உணவுச்சாலைகளிலும், திருமண மண்டபங்களிலும் இவற்றின் பாவனையை இல்லாதொழிக்கவேண்டும். இவ்வாறு யாழ்ப்பாண மாநகர சபையினால் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண சபை எடுத்துக் கொண்ட தீர்மானத்துக்கு...

All posts loaded
No more posts