வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

இலங்கையின் வடகிழக்கில்,வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை, நட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடந்த்தும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்து வரும் நாட்களிலும் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்குமென்று வளிமண்டலவியல்...

கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை நியமனம் தொடர்பான சரியானதொரு தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலிற்கு முன் தமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் எதிர்வரும் 15...
Ad Widget

Techstars அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend Jafffna நிகழ்வு!

Techstars அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend Jafffna நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் 2வது தடவையாக எதிர்வரும் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை கோப்பாயில் அமைந்துள்ள சக்தி ஓய்வு விடுதியில் நடைபெற உள்ளது. இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....

வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல் என்ற சுற்றறிக்கை வாபஸ்

வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீளப் பெற, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து, வாகனங்கள் தவிர்த்து போத்தல்கள் போன்ற வேறு எவற்றிலும் பெற்றோல் வழங்கப்படாது என, சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த சுற்றறிக்கையை தற்போது...

மலேரியா நுளம்புகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை : டெங்கு ஒழிப்புக்கு விசேட வேலைத்திட்டம்

டெங்கு நுளம்பை போன்று மலேரியா நுளம்புகளும் வடமாகாணத்தில் பல இடங்களில் காணப்படுவதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு டொக்டர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். இந்த மலேரியா நுளம்பு முதன்முறையாக மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும். பின்னர் இது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடமாகாண பிரதேசங்களில் காணப்படுவதாகவும். இதனை இல்லாதொழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்...

பெற்றோல் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

நாட்டில் காணப்பட்டு வரும் பெற்றோல் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோலை விநியோகிக்க வேண்டும் என அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனிய வள அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில், கனிய எண்ணெய் வள அமைச்சின் செயலாளர் உபாலி தென்னகோன் கருத்து வெளியிடுகையில்,...

சட்ட விரோதமான பிரமிட் வியாபாரத்துக்கு எதிராக கேள்வியெழுப்பியவர்களுக்கு மிரட்டல்

யாழ். சாவகச்சேரியில், இடம்பெற்ற சட்ட விரோதமான பிரமிட் வியாபாரம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வில், நிறுவன முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறையிலான வியாபார முறை மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள், ஏமாற்றிய பணத்தை திருப்பி வழங்குமாறும் இந்நிகழ்வின் போது எதிர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை அடிபணியும் வகையில்...

கர்பிணி தாய்மார்கள் தொலைபேசி ஊடாக போசாக்கு உணவு பொருட்களை பெறும் வசதி!

கர்பிணி தாய்மார்கள் எதிர்வரும் காலங்களில் வரிசையில் நிற்காமல், தொலைபேசி ஊடாக போசாக்கு பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சாகலரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை-தெனியாய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் கர்பிணி தாய்மார்களுக்கு...

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 நாட்களுக்கு கடுமையான மழை தொடரும்!!! : வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட வடமாகாணத்தின் பல இடங்களில் கடுமையான மழை பெய்வதனால் வீதிகள் அனைத்தும் வெள்ளம் நீரால் சூழ்ந்துள்ளன. தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக கடுமையான மழை பெய்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வளிமண்டல தாழமுக்கம் நிலைகொண்டிருப்பதனாலேயே யாழ்ப்பாணத்தில் கடுமையான மழை பெய்வதாக வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். அத்துடன்...

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை சத்தோச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய இந்த புதிய விலைக்கு கடந்த 2ம் திகதி முதல் சத்தோச நிறுவன விற்பனை கிளைகளில் பின்வரும் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்: சம்பா அரிசி ஒரு கிலோ ரூபா 78.00 நாட்டரிசி ஒரு கிலோ ரூபா 74.00 வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ ரூபா 65.00 சிவப்பு...

அசா­தா­ரண கால­நிலை தொடரும்! சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான கால ­நிலை தொடரும் என கால­நிலை அவ­தான நிலையம் அறி­வித்­துள்­ளது. நாட்டின் பெரும்­பா­லான பகு­திகளில் பனி­மூட்­டத்­துடன் மழை­வீ­ழ்ச்சி காணப்­படும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது. அதே போன்று நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களில் சில நேரங்­களில் கடும் காற்று ஏற்­படும் எனவும் மலைப்­பாங்­கான பகு­தி­களில் அதிக மழை பெய்­வ­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­வ­தா­கவும் கால­நிலை அவ­தான...

ஏ9 வீதியில் கடும் பனி மூட்டம்!! சாரதிகளுக்கு எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் - கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழுக்கான புதிய கட்டண விபரம்!!

பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை (Police Clearance Reports) பெற்றுக்கொள்வதற்காக அறிவிடப்படும் கட்டணம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண மறுசீரமைப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி (2017.11.05)முதல் நடைமுறைக்குவருவதாக பொலிஸ் தமைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது, பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை இலங்கையிலிருந்து விண்ணப்பித்து அதனை இலங்கை முகவரிக்கு தபாலில் சேர்க்கும் போது அறவிடப்படும் புதிய...

மென் பாணங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்க புதிய வரி!

மென் பாணங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்க புதிய வரி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சீனி நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மென் பாண வகைகளில் 6 கிராமுக்கும் அதிக சீனி காணப்படுமாயின், மேலதிகமாக...

கால் நடைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்ல தடை!

இலங்கையில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தற்காலிகமான இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கட்டாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இன்று காலை நாடு திரும்பிய நிலையிலேயே, மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இலங்கையில் சட்டவிரோதமாக கால் நடைகளை கடத்திச் செல்கின்ற சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் பாற்பண்ணைக் கைத்தொழில்துறைக்கும் விவசாயத்தேவைகளுக்கும் பாரியதாக்கம்...

ரயில் கடவைகள் தொடர்பாக கவனம் செலுத்தாதவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம்!!

ரயில் கடவைகளுக்கு குறுக்காக பயணிக்கும் பொழுதும், ரயில் கடவைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ரயில் கடவைகள் தொடர்பாக கவனம் செலுத்தாதவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று சிவில் மற்றும் விமானசேவைகள்...

ரயில் சேவை இன்று முதல் நாவற்குழி வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது!

கொழும்பு - காங்கேசன்துறை வரையான ரயில் சேவை நாவற்குழி ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாவற்குழியில் உள்ள ரயில் பாலத்தில் உள்ள திருத்த பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை,...

யாழ். புகையிரத சேவை எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்ப்பாணம், நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில்...

மாலை நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் வாய்ப்பு!

தற்போது நிலவி வரும் இடைநிலை பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக மாலை நேரங்களில் நாட்டின் சில பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை விழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் காலநிலை அவதானியுமான கே.ஆர்.அபேசிங்க தெரிவித்துள்ளார். மின்னல், மழை, டொனாடோவை ஏற்படுத்தும் மழை மேகங்களில் மேற்பரப்பில் சுமார் 8 கிலோ மீற்றர் வரை 95 வீதம் பனி படிந்திருப்பதாகவும்...

ஜனாதிபதி, சம்பந்தன் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை புறக்கணிக்குமாறு வேண்டுகோள்!

அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பான ஊடகஅறிக்கை 12-10-2017 வவுனியாமேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்தவழக்குகள் மீண்டும் வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்னும்,கோரிக்கையை முன்வைத்து தமிழ் அரசியல் கைதிகள் மூவர்கடந்த 18 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்தவிடயம் தொடர்பாக ஒரு தீர்க்கமான...
Loading posts...

All posts loaded

No more posts