Ad Widget

தாய்நாட்டுக்கு வருகை தர எதிர்பார்த்துள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் விடுக்கும் வேண்டுகோள்!

கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டிற்கு வருகை தருவதற்காக எதிர்ப்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸ் வருவது மற்றும் பரவுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருவதை முழுமையாக...

யாழ்.போதனா வைத்தியசாலை மாதாந்த கிளினிக் செல்லும் மக்களுக்கான அறிவித்தல்!

யாழ்.போதனா வைத்தியசாலை மாதாந்த கிளினிக் ஊடாக பயன் பெறும் யாழ்.தீவக மக்கள் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். கொரோனோ தொற்று தாக்கம் காணரமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் நோயாளர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெறுகின்றவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பையடுத்து யாழ் போதனா வைத்தியசாலை...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கே கொண்டு வந்து பொருள்கள் வழங்கும் வணிக நிலையங்களின் விவரம் வெளியீடு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் விவரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் மற்றும் மருந்துகள் தொடர்பில் தொலைபேசி ஊடாக ஓடர் வழங்கினால் வீடுகளுக்கு கொண்டு அவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரோனா வைரஸ்...

மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக பிரகடனம்!

எதிர்வரும் 30 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 3 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த காலப்பகுதி அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னரும் இதுபோன்றதொரு காலப்பகுதி அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக அவசிமின்றி யாரும் வெளியில் செல்ல அனுமதி இல்லை – பிரதிப் பொலிஸ் மா அதிபர்!!

ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் மிக அவசர தேவையின்றி வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும், ஒரு பிரதேசத்திருந்து இன்னொரு பிரதேசத்திற்கு செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்hறு தெரிவித்தார். ‘ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் ஒரு...

ஒசுசல மருந்தகங்கள் திறக்கப்படும்!

ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும் நாட்டிலுள்ள சகல 'ஒலுசல' மருந்தகங்களும் திறந்திருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகள், மருந்தகங்கள் என்பனவற்றிலிருந்து நாளாந்தம் மருந்துகளை கொள்வனவு செய்வோர் ஊரடங்குச்சட்டத்தினால் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார அமைச்சு இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. நோயாளர்களின் நோய் தொடர்பான அட்டை, மருந்துச் சீட்டு என்பனவற்றை ஊரடங்குச்...

காய்ச்சல், இருமல் ,தொண்டை வலி, இசுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால்!!

காய்ச்சல், இருமல் ,தொண்டை வலி, இசுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும். மருத்துவ...

வடக்கில் ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிக்கே மீள நடைமுறைப்படுத்தப்படும்

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னர் நண்பகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்ட போதும் பிற்பகல் 2 மணிக்கே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி...

யாழ்ப்பாணத்தில் பலருக்கு கொரோனா வாய்ப்பு உண்டு! பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள...

வடக்கில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பொதி – கிராம சேவையாளர் ஊடாக விவரம் திரட்ட ஏற்பாடு

வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து பணியாற்றுவோர் தொடர்பில் கிராம அலுவலர்கள் ஊடாக விவரங்களைச் சேகரித்து உணவுப் பொருள் பொதிகள் வழங்கப்படவுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட – உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினை உள்ளவர்கள் தமது கிராம சேவையாளருக்கு அறிவிக்குமாறு இலங்கை...

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் – சுகாதார பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள் தொடர்பில் வாந்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் உண்மைக்குப்புறம்பான தகவல்களில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம். நோயாளிகள் தொடர்பான விடயங்கள் நாளாந்தம் பொது மக்களுக்கு அறிவிக்ப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 1990 என்ற சுவசெரிய அம்புலன்ஸ்...

வடமாகாணத்தில் நாளை காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 வரை ஊரடங்கு தளர்வு!!

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீளவும் மதியம் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும்...

சங்கக்கார, மஹேல, மெத்தியூஸ், திமுத்து ஆகியோர் நாட்டு மக்களிடம் கேடடுக்கொண்டுள்ளது என்ன ?

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று பாரிய நெருக்கடியொன்றைத் தொற்றுவித்திருக்கிறது. இந்நிலையில் நாட்டில் வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர்கள், மக்கள் மத்தியில் விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை முன்வைத்து, குறுகிய நேரக்காணொளிகளையும் எழுத்துமூலப் பதிவுகளையும் தமது டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர். அவ்வாறு...

ஆராதனையில் பங்கேற்றோர் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்குமாறு ஆளுநர் கோரிக்கை; தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை

சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த மதபோதகரின் தலைமையில் நடைபெற்ற ஆராதனை மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்றவர்களை உடனடியா தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதுடன் தங்களது விவரங்களை அருகில் உள்ள பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டுள்ளார். தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர்...

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் -ஆலோசனைகள்

இல்ஙகையில் நாடுமுழுவதும் கடந்த 20ம் திகதி மாலை 6 மணி தொடக்கம்  24 செவ்வாய்க்கிழமை காலை 6  மணிக்கு தளர்த்தப்பட்டு  மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு நாளை காலை விலக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ள வேளையில் மக்கள் என்ன செய்யவேண்டும் என சுயதொழில் முனைவாளரும் தகவல்தொழில்நுட்பவியலாளருமான ...

சுயமாக முன்வர 48 மணித்தியால கால அவகாசம்: கைது செய்யப்பட்டால் 3 வருட சிறை!!

வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படாமலிருப்பவர்கள் தாமாக கண்காணிப்பிற்கு முன்வருவதற்கு 48 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்வராதவர்கள் பாதுகாப்பு துறையினரால் இனங்காணப்பட்டால் 3 வருட சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் நாளை மறுதினம் 24 ஆம் திகதி செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு...

கர்ப்பிணிப் பெண்களுக்கு விசேட வைத்தியர் கபில ஜயரத்ன விடுக்கும் முக்கிய வேண்டுகோள் !

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் கர்ப்பிணித்தாய்மாரின் எண்ணிக்கை குறைந்தளவாகக் காணப்பட்டாலும் அவர்கள் ஏனையவர்களை விட விசேட கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரிவினராகக் கருதப்படுவதாக விசேட வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் கர்பிணிப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்வதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும் வைத்தியர் கபில ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

கொழும்பு, ஹம்பகா, புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு செவ்வாய் வரை நீடிப்பு!!

கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம், ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை நடைமுறைக்கு வந்த ஊரடங்கு நிலை வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீளவும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு...

அரியாலையில் கிறிஸ்தவ மதபோதனையில் கலந்துகொண்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்.செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்துகொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பாிசோதனைக்கு உட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூா்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர்...

ஊரடங்கு வேளையில் வீதியில் பயணித்தால் வாகனம் கையகப்படுத்தப்படும் – பொலிஸ் எச்சரிக்கை

ஊரடங்கு வேளையில் வாகனங்களில் நடமாடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. “அத்தியாவசிய சேவைகள், ஊடகவியலாளர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணமாவதற்கு விமான நிலையத்துக்குப் பயணிப்போர் வீதிகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். வெளிநாடு பயணமாவோர் நுழைவுவிசைவு மற்றும் கடவுச்சீட்டு என்பன காண்பிக்கவேண்டும். ஏனையோர் வாகனத்தில் பயணித்தால் வாகனம் பொலிஸாரால் கையகப்படுத்தப்படும். அந்த...
Loading posts...

All posts loaded

No more posts