- Friday
- March 29th, 2024
"மூன்றாவது கண்களால் உலகை பார்ப்போம்" என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் புகைப்பட போட்டி ஒன்றை நடத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. (more…)
இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் இனி தேசிய அடையாள அட்டை சமர்பிக்கவேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது. (more…)
சுதேச மருத்துவத் திணைக்களத்தால் வடமாகாணத்தில் நீண்ட வைத்திய பாரம்பரியத்தைக் கொண்ட சித்த ஆயுள்வேத வைத்தியப் பரம்பரைகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வடமாகாண ஆணையாளர் திருமதி சி.துரைரட்ணம் தெரிவித்தார். (more…)
மின்சாரம், தண்ணீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் தபால்காரனிடம் செலுத்தலாம் என தபால் மா அதிபர் டி.எல்.பி.ரோஹண அபயவர்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். (more…)
நல்லூர் ஆலயச் சூழலிலுள்ள வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் அறவிடுவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை (08) முதல் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையால் தொழில் முயற்சியாளருக்கான தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. (more…)
திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)
பாடசாலை மாணவர்கள், மற்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான செய்திகளை வெளியிடும் போது மிகவும் பொறுப்புணர்வுடன் ஊடகவியலாளர்கள் செயற்படவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார். (more…)
வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் மதுபாவனை போன்ற உளசமூக பிரச்சினைகளினால் ஒருவர் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு, அதீத நெருக்கடிகளுக்கு ஆளாகின்ற போது அது தொடர்பில் (more…)
18 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளின் பாவனைக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்க வேண்டாம் என்று பெற்றோர்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (more…)
2014 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகி, ஓகஸ்ட் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. (more…)
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் இந்துக் கலாச்சார ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஆலய தரிசனத்திற்கு வாருங்கள் என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இதெரிவித்தார். (more…)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் துண்கலைக்கழகத்தின் இசை, நடனம், சித்திரமும் வடிவமைப்பும் ஆகிய கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்டு பதிவை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான புதிய கல்வி ஆண்டுக்கான வழிக்காட்டல் நிகழ்ச்சித்திட்டம் பிற்போடப்பட்டுள்ளது. (more…)
வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்த போதிலும் கொழும்பு உட்பட தென்பகுதிக்கு சென்று வரும் பயணிகளில் மாதாந்தம் சுமார் 10 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு வருவதாக பருத்தித்துறை கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)
தேசிய மீனவ ஒத்துழைப்பின் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி சுவீகரிப்பு , மீள்குடியேற்றம், காணாமல் போனோர் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டம் (more…)
இம்முறை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை அனுமதிப் அட்டை கிடைக்கப்பெறாத பரீட்சாத்திகள் உடனடியாக அழைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார். (more…)
யாழ். மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்களை வழங்க தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழ்த் தேசிய கட்சி அறிவித்துள்ளது. (more…)
யாழ். மாநகர எல்லைக்குள் இந்திய வீட்டுத் திட்டத்தில் வீடுகள் கட்டுபவர்களுக்கு அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் மாநகர சபையினால் இலவசமாகச் செய்து கொடுக்கப்படுமென யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts