Ad Widget

தமிழினத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம்!

இன்றைய அரசியல் கலாசாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக உருமாறி வரும் தமிழ் சமூகம் கல்வி அறிவிலும் பின்தங்குவார்களாயின் எமது இனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்திற்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரதமர அதிதியாகக் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...

வேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் வேலை வழங்க திட்டம் : யாழில் ஜனாதிபதி

இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினைநேற்று (19) திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார். இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை அனைவரும் அறிந்ததே. நாட்டில்...
Ad Widget

வடக்கு கிழக்கை எதற்காக இணைக்கக் கோருகிறோம்? – முதலமைச்சர்

வடக்கையும் கிழக்கையும் பிரித்துவைக்கும் நிலை தொடர்ந்தால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராகக்கப்படுவார்கள் என வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலை மாறி, வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகரசபை...

ஐ.நா மனிமத உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வில் கஐேந்திரகுமார், கஐேந்திரன் ஆகியோர் ஆற்றிய உரை

ஐ.நா மனிமத உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வின் {விடயம் 5) இன் கீழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஐேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராசா கஐேந்திரன் ஆற்றிய உரை.. HUMAN RIGHTS COUNCIL Delivered by:- Gajendrakumar Ponnambalam 37th Session ITEM 5 – General Debate Mr. President,...

ஐ.நா.வில் பெரும் நெருக்கடி காத்திருக்கிறது!: மாவை

இலங்கையில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் தாக்கம் ஐ.நா.வில் எதிரொலிக்கும் என்றும், ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி காத்திருக்கின்றது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மதுவரி திருத்தச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் கண்டியில்...

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் வடக்கில் முதலிட வேண்டும் : சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர்

“இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால் வடக்கில் முதலிட வருமாறு புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் யாழ் மாவட்டத்தில் விருந்தோம்பல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதல் வழங்கும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று...

வடக்கில் மருத்துவ சேவைகள் இன்னும் பூரணத்துவம் அடையவில்லை : வடக்கு முதல்வர்

வடபகுதியில் பல்வெறு அரச மற்றும் தனியார் மருத்துவமனைகள் சேவையாற்றுகின்ற போதும் அதன் சேவைகள் இன்னமும் பூரணத்துவம் அடையவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வவுனியா புளியங்குளம் வைத்தியசாலைக்கு வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், “வட...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைக்கின்றது

உள்ளக விசாரணையினை வலியுறுத்துகின்ற 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு https://youtu.be/WCJ_XtPky2E ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட்டிலேயே ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய...

தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இல்லாதவர்கள் குறுக்குவழியிலேனும் வெற்றியை அடையத் துடிப்பார்கள் : பொ.ஐங்கரநேசன்

விளையாட்டுப் போட்டிகள் உடல் ஆரோக்கியத்துக்கு மாத்திரம் அல்லாமல் மன ஆரோக்கியத்துக்கும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. வெற்றியைக்கண்டு துள்ளாமலும் தோல்வியைக்கண்டு துவழாமலும் வெற்றியையும் தோல்வியையும் ஓரே மாதிரி நோக்கும் மனப்பாங்கைச் சிறு வயதில் இருந்தே வளர்த்தெடுப்பதற்கு விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இல்லாதவர்கள் எந்தக் குறுக்கு வழியிலேனும் வெற்றியை அடையத் துடியாய்த்...

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது என்ன தவறு?

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பது என்ன தவறு? என்ற தமீழீழ விடுதலைப்புலிகளின் வசனத்தையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடை நாமத்தினாலும் நல்லூர் கிட்டுப்பூங்கா கரகோசத்தால் அதிர்ந்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஸ் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு உரையாற்றியுள்ளார். இவ்வளவு காலமும் நாங்கள் கஷ்டப்படது...

வடகிழக்கில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கு பேசாமடந்தைகளான தமிழ்த்தலைமைகளே பொறுப்பு :ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

ஐக்கியதேசியக் கட்சி தனது உள்ளுராட்சித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்குக் கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைக்கப்போவாதகத் தெரிவித்திருக்கிறது. தமிழ் இன அழிப்புப் போரை நடாத்திய அரசாங்கம் இப்போது தமிழ்ப் பண்பாட்டுப்போரில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே பௌத்த விகாரைகளைப் பெரும் எண்ணிக்கையில் அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வடகிழக்கில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கான பொறுப்பைப் பாராளுமன்றத்தில்...

துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும் : சட்டத்தரணி சுகாஸ்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், தமிழ்தேசம் பாதுகாக்கப்பட தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சைக்கிள் சின்னத்தில் போட்டயிடுகின்ற தமிழ்த்தேசிய பேரவையின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே...

“எம்முடன் இணைந்தால் மட்டுமே உறுதியான தீர்வு” : இரா. சம்பந்தன்

“தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்....

கறைபடிந்த கைகளுக்கா? தூய கரங்களுக்கா? யாருக்கு உங்கள் வாக்கு? : மணிவண்ணன்

மக்களாகிய உங்களைக் கொன்றுகுவித்த, நீங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட கறைபடிந்த கரங்களோடு உங்கள் முன் வந்து நிற்கின்றவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கப்போகின்றீர்களா ? அல்லது இந்த இனத்தின் விடுதலைக்காக விலைகொடுத்ததவர்களின் வழியிலே சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகனான கஜேந்திரகுமார் பொன்னம்பத்தின் தலைமையை ஏற்று தூய கரங்களோடு உங்கள் முன் வந்துநிற்கின்ற எங்களுக்கு வாக்களிக்கப்போகின்றீர்களா என்பதை நீங்களே...

சிங்கக் கொடி ஏந்திய சம்பந்தனும், சுமந்திரனுமே துரோகிகள் : கஜேந்திரகுமார்

1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்களி முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனும் சுமந்திரனுமே சிங்களவர்களுடன் இணைந்து...

அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கு காரணம்: ஜனாதிபதி

அரசியல்வாதிகள் மக்களின் சொத்தை களவாடுவதே வறுமைக்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதநதிரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “கட்சி பார்த்து அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதை நான்...

காணாமற்போனவர்கள் எவரும் நாட்டில் எங்குமே இல்லை : யாழில் ஜனாதிபதி

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இந்த நாட்டில் எங்கும் ஒழித்துவைக்கப்படவில்லை. அந்த இடங்களில் எல்லாம் தேடிப்பார்த்த பின்னரே இதனைத் தெரிவிக்கின்றேன். எனவே காணாமற்போனோரின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டுமாயின் அதனை நான் ஏற்பாடு செய்வேன்”இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் இன்று அறிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று...

யாழ் மாநகரை ஆட்சி செய்தவர்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும்!!, மாநகர முதல்வரது வாகனமும் ஏலத்தில் விற்கப்படும் : வி.மணிவண்ணன்

யாழ் மாநகரசபையில் ஈபிடிபியின் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்ட ஊழல்கள் தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப் பேவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ்த் தேசியப் பேரவை யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றினால் அப்போதைய முதல்வராக இருந்த யோகேஸ்வரி பற்குணராஜாவால் கோடிக்கணக்கான நிதியினைச் செலவிட்டு தனது பயன்பாட்டிற்கு என...

எங்கள் சகோதரிகளின் கற்புக்களை சூறையாட காரணமான பேரினவாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வெட்கமில்லையா? : மயூரன்

எங்கள் சகோதரிகளின் கற்புக்களை சூறையாட காரணமான பேரினவாத கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வெட்கமில்லையா என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் கேள்வியெழுப்பியுள்ளார். நெடுங்கேணியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், இசைப்பிரியா என்ற சகோதரியின் கற்பு சூறையாடப்பட்டதுதான் தெரியும்...

வடமாகாண விவசாய நிலங்கள் நஞ்சாகி விட்டமைக்கான காரணங்களை கண்டறிய வேண்டும் : முதலமைச்சர்

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு நீர்த்தேவைக்கான ஆறுகளோ அல்லது நீர்வீழ்ச்சிகளோ இல்லாத நிலையில் நிலத்தடி நீரை நம்பியே எமது விவசாய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. அண்மைக் காலமாக விவசாய நிலங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் அளவுக்கதிகமான உரப்பாவனைகள் மற்றும் பூச்சிகொல்லிப் பாவனைகள் எமது நிலத்தடி நீரைப் பருக முடியாத அளவிற்கு அதை என வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்...
Loading posts...

All posts loaded

No more posts