மின்தடை முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மின் தடைகள் தொடர்பில் அழைப்பு நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும்...

யாழ்ப்பணத்தில் போதை விருந்து ; சமூக ஆர்வலர்கள் கடும் விசனம்!!

யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அண்மையில் களியாட்டம் என்னும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது. ஆண்களுக்கு நுழைவு சீட்டு 1,500 ரூபாய்க்கும் அவர்களுடன் வரும் பெண்களுக்கு 1,000 ரூபாய்...
Ad Widget

யாழில் சமாதானத்துக்கு குந்தகம் விளைவித்த 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேருக்கு விளக்கமறியல்!!

யாழ். கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இரண்டு நாட்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவை நேற்று(08.11.2023)யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கோப்பாய் மத்தி...

டிசம்பரில் கிராம அலுவலர் போட்டிப் பரீட்சைகள்!

2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், "இலங்கையில் 14,022 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு...

ஐரோப்பிய ஆயுதப் படைகள் மீதான ஒப்பந்தம்: ரஷ்யா வெளியேற்றம்!!

ஐரோப்பிய பாரம்பரிய ஆயுதப் படைகள் மீதான ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா முறைப்படி வெளியேறியுள்ளது. பெர்லின் சுவர் இடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு சிஎப்இ எனும் மரபுசார் ஆயுதப் படைகளுக்கான ஒப்பந்தம்கொண்டுவரப்பட்டது. அதன்படி வழக்கமான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டது. இதன் நோக்கம், பனிப்போர் போட்டியாளர்களை ஒரு விரைவான தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய படைகளை கட்டியெழுப்புவதை நிறுத்துவதாகும்....

தமிழர் பிரதேசங்களை சீனாவிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி போராட்டம்!

வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் ஹொங் தலைமையிலான குழுவினர் இரண்டாம் நாளாக இன்று நயினாதீவுக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது...

யாழில் பார்வைக்குறைபாடினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

யாழில் பார்வைக்குறைபாடினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ’கண்ணில் பார்வைக் குறைவு ஏற்படுவதற்கு வென்புறை, கண்ணாடி அணிதல், நீரிழிவு நோய், வயது காரணமாக வருகின்ற விழித்திரு நோய்...

பல்கலை மாணவர் மீதான தாக்குதல் பேரினவாதத்தின் அடக்குமுறையை காட்டுகிறது – வேலன் சாமிகள்

கிழக்கு மாகாணத்தில் வாயில்லா ஜீவன்களுக்காக ஜனநாயக வழியில் போராடச் சென்ற வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை தொடர்வதை காட்டி நிற்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிறிலங்கா காவல்துறை மேற்கொண்ட தாக்குதல்...

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75...

காசாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் : புதைகுழி போல காட்சியளிக்கும் கொடூரம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான கொடூர போரின் விளைவாக தற்போது காசா பகுதி புதைகுழி போல காட்சி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன்(07) ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், யுத்தத்தினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல்களினால் காசா பகுதியில்...

கைதிற்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் இன்று சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சித்தாண்டியில் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதன் பின்னர், யாழ்ப்பாண பல்கலைகழகத்தை சேர்ந்த 5 மாணவர்களும், கிழக்கு...

மின்னல் எச்சரிக்கை குறித்த அறிவுறுத்தல்!!

நாட்டில் மின்னல் எச்சரிக்கை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலாம் தவணை எப்போது? – கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி...

யாழில் பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் அடங்கிய குழுவினர் !

யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை (05) விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு...

யாழில் தனியார் விடுதியொன்றில் ஆணின் சடலம் மீட்பு!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், அவர் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில்...

வடக்கு மக்களுக்கு சீன நிதியுதவின் கீழ் வீடுகளை வழங்குவதற்கு திட்டம்!

வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கநேற்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும்...

ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் மாநாடு : சம்பந்தன் விவகாரம் குறித்து சுமந்திரன் நீண்ட விளக்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது/ இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நேற்றையதினம் முற்பகல் 11மணிக்கு வவுனியாவில் உள்ள சுற்றுலா ஓய்வு விடுதியில்...

சுமந்திரனின் கருத்து குறித்து மாவையிடம் வருத்தம் வெளியிட்ட சம்பந்தன்!

இரா.சம்பந்தன், பொதுவெளியில் தன்னை பதவி விலகுமாறு எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்று நடைபெற்றிருந்தன. இந்த சந்திப்பின் போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார். மேற்படி சந்திப்புக்கள் தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா...

அமெரிக்காவின் அடுத்த நகர்வு: உக்ரைன் – இஸ்ரேல் தலைவர்களிடையே விசேட சந்திப்பு

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்கு இடையே சந்திப்பை நடத்த இரு நாட்டு அதிகாரிகளும் முயற்சித்து வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும் என்றும் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts