தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லை!!! – பரபரப்பு தகவல் வெளியானது

ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர...

யாழ்.பல்கலை. மாணவர்களுக்கு எதிரான வழக்கை திங்களன்று விசாரணைக்கு எடுக்க சட்டத்தரணிகள் தீர்மானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் அணைத்து சமர்ப்பணங்கள் செய்ய சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், உரிய அனுமதி வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்...
Ad Widget

தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவரும் கைது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள...

யாழில் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மூவரும் மாணவர்களை பிணையில்...

மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என என்னிடம் கூறினார்! – சஹரானின் மனைவி வாக்குமூலம்!

தனது கணவன் மதத்திற்காக உயிரை மாய்த்துக்கொள்வேன் என அடிக்கடி கூறுவதாக குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா வாக்குமூலமளித்துள்ளார். எனினும் அவர் தற்கொலை தாக்குதலை நடத்துவாறென தனக்கு தெரிந்திருக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாய்ந்தமருதில் கடந்த மாதம் 26ஆம் திகதி படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சமரின்போது பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில்...

பல்கலை மாணவர் கைதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை!!

பல்கலைக்கழக மாணவர் கைதைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு... உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில்; இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ்...

யாழ் பல்கலைக்கழகத்தில் நிலவும் நெருக்கடி நிலை தொடர்பாக..

யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகள் பல்கலைக்கழக இயல்பு நிலையை குழப்புவதாக குற்றம் சாட்டி, நிலவி வரும் முரண்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் -பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துடன் கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்குமாறு கேட்டும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க உரிமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் - அவர்களை அச்சுறுத்தி செயற்படுவதை கண்டிதும்,...

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் படுகொலை!!

வவுனியா சாலம்பைக்குளம் பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 30 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தவர் மீது, வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இவர் மீது கடந்த சில...

மருத்துவ பீடத்தில் ஜொனி மிதிவெடி, கிளைமோர் மீட்பு!!

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் மீட்கப்பட்டவை போலி மிதிவெடி மற்றும் கிளைமோர் என பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவை கண்காட்சிக்காகச் செய்யப்பட்டவையாக இருக்கலாம்” என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இன்று இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்தனர். இதில் மருத்துவபீடத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் விடுதலைப்...

யாழ்.பல்கலை. மாணவர்கள் இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் விண்ணப்பம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்....

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் கைது – மாணவர்கள் மத்தியில் பதற்றம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல் எனக் கூறிக்கொண்டு இன்று அதிகாலை முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம், மருத்துவபீட வளாகம், மாணவர் விடுதிகள்...

யாழ்.பல்கலை சுற்றிவளைப்பு: மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் விசாரணையில் !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் செயலாளரும் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் போராளிகள் படங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதையடுத்தே அவர்கள் இருவரும்...

யாழ்.நகரில் வாள்களைக் காட்டி கொள்ளையில் ஈடுபட்ட அரசியல்வாதியின் சகோதரர் கைது!!

யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை வாளால் வெட்டிக்காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேடப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர் ஈபிடிபி கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ்.மாநகர பிரதி முதல்வருமான றீகனின் இளைய சகோதரர்...

சித்தன்கேணியில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து தேடுதல்!!

வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணியில் வீடொன்றில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன என்று சந்தேகத்தில் அங்கு அகழ்வுப் பணிகளை பொலிஸாரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்தனர். புத்தளத்தில் வீட்டு உரிமையாளர் உள்ளார் என்றும் அங்கு புத்தளத்தில் உள்ள சிலர் வந்து சென்றதாகவும் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், ஆயுதங்கள் புதைக்கப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து...

அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்க முயாதென்றும், அதில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சவாலுக்குட்படுத்த நீதிமன்றத்தை விரைவில் நாடவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் நேற்று (02) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவசரகால சட்டம் நடைமுறை தொடர்ந்தும் நீடிப்பது தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட...

இரும்பு தொழிற்சாலையில் வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிப்பு

ஜா-எல, ஏக்கல பகுதியில் இரும்பு தொழிற்சாலை ஒன்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இரும்புத் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கடற்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் மற்றும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும்...

தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையோர் இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஏனைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எஞ்சிய சிலரே இன்னமும்...

வவுணதீவு பொலிஸார் கொலை – அஜந்தனை விடுவிக்குமாறு சம்பந்தன் கோரிக்கை!

வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கதிர்காமத்தம்பி இராஜகுமாரன் எனும் அஜந்தன் என்பவரை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,...

சாவகச்சேரியில் குடும்பங்களின் விபரங்களை சேகரிக்கும் காவல்துறையினர்!

சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். சாவகச்சேரி காவல நிலையத்திற்கு உட்பட பகுதிகளின் பாதுகாப்புக்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி காவல நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. அதன் போதே கிராம சேவையாளர்களிடம் காவல்துறையினர் குடும்ப...

தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே அறிந்திருந்தார் – சுமந்திரன்

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிந்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயம் குறித்து எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாது அவர் சுற்றுலா சென்றமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமென்றும் அவர் சாடியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை)...
Loading posts...

All posts loaded

No more posts