நிமோனியா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!

ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு முன் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி சுகாதார அமைச்சு காண்காணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரிக்குமாயின் நிலமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விமான நிலையத்திலும் வைத்தியசாலைகளிலும் ஒரு அவசர திட்டத்தை செயல்படுத்துவதற்கு...

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு எதிராக கல்வியங்காடு பொது சந்தை வியாபாரிகள் போராட்டம்!!

யாழ்.கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று கதவடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.யாழ்.மாநகர சபை முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்தே இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி புதிதாக திறக்கப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையை சுகாதார ரீதியாக ஒழுங்காக சுத்தம் செய்வதில்லை, வரி அறவீட்டை இரண்டு மடங்காக மேற்கொள்கின்றமை, போன்ற செயற்பாடுகளைக்...
Ad Widget

யாழ் மாநகர சபையால் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

யாழ் காக்கை தீவு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதி 10 மில்லியன் ரூபா செலவில் மாநகர சபையால் ஆரம்பித்து வைக்கப்பப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைப் பரப்பிற்குள் மாநகர சபையின் எல்லைப் பரப்பில் உள்ள விடுதிகள் , உணவகங்களில் இருந்து அகற்றப்படும் கழுவு நீர் சுத்துகரிப்பில் நீண்டகாலமாக எதிர் நோக்கி வந்த பிரச்சணைக்கு தீர்வாக மாநகர...

ஒவ்வொரு மாவட்டத்திலும் மும்மொழி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்

நாடு முழுவதிலும் 1,000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். அத்தோடு ஒவ்வொரு மாவட்டத்திலும் மும் மொழிகளை கற்பிக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி பளிபாண ஸ்ரீ சந்திரானந்த பௌத்த மகளிர் வித்தியாலயத்தை பிரதமர் திறந்து வைத்தார். அதன் பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். புதிய மக்கள் மய கொள்கையின்...

வீடு மற்றும் சிறிய வியாபார நிலையக் கட்டுமானங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்க ஜனாதிபதி பணிப்பு!!

வீடொன்றை அல்லது சிறிய வர்த்தக நிலையமொன்றை நிர்மாணிக்கும் திட்டங்கள் உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருப்பின் அதற்கான அனுமதியை ஒரே நாளில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சிறப்புக்...

சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை சான்றிதழை பெற்றுக்கொள்ள மேலும் 3 அலுவலகங்கள்

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவம் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழ் போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் போது உள்ள நெருக்கடியை தவிர்ப்பதற்கு தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு போக்குவரத்து...

சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் – அங்கஜன்

சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றை அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...

ஆன்மீக அரசியலில் ஈடுபடும் தன்னுடன் கைகோர்க்குமாறு டக்ளஸ் அழைப்பு

ஆன்மீக அரசியலில் ஈடுபட்டு வருகின்ற தன்னுடன் மக்கள் அணிதிரண்டு கைகோர்த்தால் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை மட்டுமன்றி வளமான எதிர்காலத்தையும் ஏற்படுத்த முடியும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தலைமன்னார் இறங்குதுறை கிராமம், கீளியன்...

அரச ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் அவசர எச்சரிக்கை!

ஒழுக்க விதிகளுக்கு அமைய செயற்படாதோர் மற்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு அரச ஊழியருக்கும் தராதரம் பாராது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கவெரட்டிய பிரதேசத்தில் சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண...

வவுனியாவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மக்களுக்காக இலவச ஆடை வங்கி!!

வவுனியா வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் ஆடைத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு இலவச ஆடை வங்கியொன்று திறந்து வைக்கப்படவுள்ளது. பூந்தோட்டம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.சு.கோணேஸ்வரலிங்கத்தினை ஸ்தாபகராக கொண்டு ஆரம்பிக்கப்படும் இலவச ஆடை வங்கி, எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில்...

யாழில் அதிகரித்து வரும் தற்கொலை: வீடு வீடாக களமிறங்கினார் நல்லூர் பிரதேசசபை பெண் உறுப்பினர்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும், நல்லூர் பிரதேச சபையின் பெண் உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் அண்மைக் காலமாக யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை தொடர்பாகவும், நல்லூர் பிரதே சபையின் தற்காலிக உக்காத குப்பைகளின் சேமிப்பு மையம் தொடர்பாகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி...

26 வருட தமிழ் அரசியல் கைதி வைத்தியசாலையில் மரணம்

மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறியதாவது, மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த செல்லபிள்ளை மகேந்திரன் என்பவர் 1995...

தொண்டமனாறு கடல்நீரேரியில் குளித்த இளைஞன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்!!

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. 5 நண்பர்களுடன் தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த போதே...

ஹப்புத்தளை விமான விபத்து ; காரணத்தை கண்டறிய சிறப்புக் குழு நியமனம்!

விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் ஆராய விமானப் படைத் தளபதியின் அறிவுத்தலின் கீழ் சிறப்பு குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம் வீரவிலவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப் படைப் பேச்சாளர் கெப்டன்...

ஒற்றையாட்சியை பாதுகாப்பேன்! பௌத்தத்தை பாதுகாப்போம்! அரசியலமைப்பில் மாற்றம்! ஜனாதிபதி

எங்கள் நாட்டின் அரசியலமைப்பின் படி எனது ஆட்சிக் காலத்தில் ஒற்றையாட்சி அரசு பாதுகாக்கப்படும். அவை பௌத்த சாசனத்தை பாதுகாத்து வளர்க்கின்றன. யார் வேண்டுமானாலும் தங்கள் மதத்தை பின்பற்றலாம் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இன்று நாடாளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடன உரையை ஆற்றும்போது இதனை தெரிவித்தார். அரசியலமைப்பு மாற்றம் அவசியமென்றும் இதன்போது குறிப்பிட்டார். அவர்...

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்பு!!

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (ஜனவரி 3) வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிகக்கு பொறுப்பேற்றார். மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார். பதவி...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய 2ம் கட்ட அபிவிருத்திக்கு அமைச்சரவை ஒப்புதல்!!

யாழ்ப்பாணம் சர்வதே விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசுடனான ஒப்பந்த்த்துற்கு நேற்றைய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலகயத்மினை இந்திய அரசு அபிவிருத்தி செய்து விமான சேவைகள. ஆரம்பிக்கவிருந்த சூழலில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக தடைப்பட்டு பின்னர் இலங்கை அரசின் 2.26 பில்லியன் ரூபா நிதியில் முதல்கட்ட அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு 2019-10-17...

வலிகாமம் கல்வி வலயத்தில் அதிகார துஸ்பிரயோகம்!!

வடமாகாணத்தின் வலிகாமம் கல்வி வலயத்தில் சில அதிபர்களினதும் அதிகாரிகளினதும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் முகமான இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் தவறுவிடும் கல்விப்புல அதிகாரிகள் - தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு நடைமுறையையும் மற்றவர்களுக்கு வேறுநடைமுறையுமாக பாரபட்சத்தைக்காட்டி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக - வலிகாமம் கல்வி வலய அதிபர் ஒருவரினால் பாடசாலையின்...

காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு : அமைச்சரவையில் தீர்மானம்

காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண்பதற்கு விசேட குழுவொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நிர்வாக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று 02.01.2020 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்...

வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன் – வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

வலிகளை சுமந்த வடமாகாண மக்களுக்காக என்னை அர்ப்பணிப்பேன் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற பொது அமைப்புக்களின் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வவுனியா மக்கள் இன்று எனக்கு வழங்கிய வரவேற்பை பாரக்கின்ற போது எனது மனம் கனத்துவிட்டது. பாரிய பொறுப்பொன்று...
Loading posts...

All posts loaded

No more posts