உலகளவில் 90ஆவது இடத்தில் இலங்கை – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 887 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 859 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 19 பேருக்கும் கொரொனா தொற்று உறுதியானதாக இராணுவத்...

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் பொதும்மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி!!

மார்ச் 1ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 நிலையங்களில் தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர் திருமதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இதுவரையிலும் சுகாதார துறையினர், முப்படையினர் மற்றும் பொலிஸார் உட்பட...
Ad Widget

நள்ளிரவில் வீடுபுகுந்து வாளால் வெட்டி தாலிக்கொடி கொள்ளையிட்ட மூவர் சிக்கினர்!!

நாள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தலைவரை வாள் மற்றும் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் செபஸ்தியான் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில்...

எரியும் தீயில் எண்ணையை வார்ப்பதுபோல வடக்கு கிழக்கில் போராட்டம் – இராணுவ தளபதி

புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கடந்த சில நாட்களாக நடைபெற்ற இவ்வாறான போராட்டங்கள் ஒரு சில...

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் சிலருக்கு கொரோனா – ஏனைய ஊழியர்களின் அச்சத்தினால் பதற்றம்

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் பணியாற்றிய ஏனைய ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) கடமைக்குச் சென்ற நிலையில், அவர்கள் தமது அச்சத்தினை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத குறித்த ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகம் தொடர்ந்தும் அவர்களை சேவையாற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால்...

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறித்த தடுப்பூசியை ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என நான் பரிந்துரைத்துள்ளேன். காரணம்...

சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இவ்வாறு...

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை!!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஐம்பது கற்கை நெறிகளுக்காக நான்காயிரத்து 253 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை செயல்முறைத் தேர்வு இடைநிறுத்தம்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயல்முறை தேர்வுகள் இந்த முறை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

27 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிரடி விலை குறைப்பு இன்று முதல்

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன், இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப்...

‘மரபுவழித் தாயகம்-சுயநிர்ணயம்-தமிழ் தேசியம்’: தமிழினத்தின் பேரெழுச்சியில் மீண்டும் பிரகடனம்!

வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நேற்றையதினம் பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. குறித்த பிரகடனத்தில், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை,...

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- மூன்று மாவட்டங்களில் கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், 11 பேர் மன்னார் முசலியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 403 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதிலேயே 14 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....

நீதிமன்றத் தடையுத்தரவுக்கு மத்தியில் முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி- நீராவியடியில் தரிசனம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது. தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற சிவமோகன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன்...

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளுக்கு தடை!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தொல்லையை...

மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு தடை கோரும் பொலிஸாரின் விண்ணப்பங்கள் சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்களால் நிராகரிப்பு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – முல்லைத்தீவில் வரவேற்க தயார் நிலையில் மக்கள் : தடையுத்தரவுடன் விரைந்த பொலிஸார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் பேரணியினை வரவேற்பதற்கு முல்லைத்தீவில் நாயாற்றுப் பாலத்திற்கு அருகில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் தயாரான நிலையிலுள்ளனர். இந்நிலையில், குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடையுத்தரவுடன் வருகை தந்துள்ளனர். அவ்வாறு வருகை தந்த பொலிஸார் தற்போது நிலவும் கொவிட் -19 நிலைமைகளைக் காரணங்காட்டி, பேரணிகள்...

எத்தகைய தாக்குதலுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை- சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் வைத்து, எம்.கே.சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம்...

அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!!

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின்...

யாழில் சு.கவின் பேரணியில் கலந்து கொண்ட வாள்வெட்டுக்குழு ரௌடிகள்: பொலிசார் கைது!

யாழில் நேற்று முன்னாள் ஆவாகுழு ரௌடியின் தலைமையில் நடைபெற்ற சிறு குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இருவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர். அவர்கள் வாள்வெட்டுக்குழு ரௌடிகள் என தெரிவித்தே பொலிசார் கைது செய்ய முயன்றனர். ஒருவர் சிக்க, மற்றையவர் தப்பியோடி விட்டார். சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும், இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்களை ஐநா...

போராட்டம் மேலுமொருநாள் நீடிப்பு: 7ஆம் திகதியே யாழ்ப்பாணம் வந்தடையும்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பேரணியை முடிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை போராட்டங்களை நடத்த நீதிமன்றங்களின் மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு நாள் தாமதமாகவே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென...
Loading posts...

All posts loaded

No more posts