யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவினால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (65 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று பருத்தித்துறை- தும்பளையைச் சேர்ந்த (39 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதேவேளை பருத்தித்துறை- இமையாணன் பகுதியில் மயங்கி வீழ்ந்த...

வடமராட்சி கற்கோவளத்தில் காணி சுவீகரிப்பு முயற்சி தடுக்கப்பட்டது!

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென தனியார் காணி நான்கு ஏக்கர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை போராட்டம் ஒன்று இடம்பெற்றது. போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்த நிலையில் குறித்த காணியை இராணுவத்திற்க்கு வழங்க மாட்டோம் என பொது மக்கள் சார்பில் யாராவது தெரிவித்தால் தாம் திரும்பி...
Ad Widget

வீட்டிலும் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!!

டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 விநாடிகள் என்ற சிறிதளவான காலமே எடுக்கும் என்பதானால், அந்தக் காலப்பகுதிக்குள் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய...

வடக்கிலும் கொரோனாத் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம் இன்றுமுதல் ஆரம்பம்!!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது - கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது....

சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பாக்கியம் செய்துள்ளேன் – கெஹெலிய

இலங்கையின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு பாக்கியம் செய்துள்ளதாக புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சராக இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், பதவி மாற்றம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தொற்றுநோயைக் கையாள்வதில் சிறப்பாகச்...

யாழ்ப்பாணத்தில் இராணுவம் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் திடீரென நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர் பிருந்தாபன் பொன்ராசா கூறியுள்ளதாவது, “நேற்று நள்ளிரவு 11 மணியளவில், இராணுவ இலக்க தகடுகள் பொருத்திய மோட்டார் சைக்கிளில் உள்ளிட்ட வாகனங்களில் வந்த 10க்கும்...

முக்கிய அமைச்சு பதவிகளில் ஏற்பட்ட மாற்றம்!!

தற்போதுள்ள அமைச்சரவை அமைச்ச பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஊடகப்பிரிவு இது தொடர்பில் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், டளஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதாரத் துறை அமைச்சராகவும், பவித்ரா போக்குவரத்து அமைச்சராகவும், காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தினேஸ் குணவர்த்தன கல்வி...

மடுத்திருத்தலத்தின் ஆவணி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்றது

மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் மேதகு அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். மடு...

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது – புதிதாக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம்

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாட்டில் மேலும் 161 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த...

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) இரவு முதல் நாளாந்தம், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எவ்வாறிருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்கு வேளையிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு...

கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும்- பொது வைத்திய நிபுணர் பேரானந்தராஜா

கொரோனா தடுப்பூசியை வேறு வருத்தங்கள் இருக்கின்றவர்கள்தான் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது வைத்திய நிபுணர் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள்...

லப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 363 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் கொழும்பு விலை ஆயிரத்து 856 ரூபாயாக உயர்வடைந்துள்ளது. அத்துடன், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 743 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கு அதன் விலை வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

குளிரூட்டப்பட்ட அறைகள், உள்புற அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் 2 முகக்கவசங்களை அணியவேண்டும்!!!

குளிரூட்டப்பட்ட அறைகளில் கடமையாற்றும் அலுவலகர் மற்றும் உத்தியோகத்தர்கள் முடிந்தவரை இரண்டு முகக்கவசங்களை அணியவும், இரண்டு மீற்றர் சமூக இடைவெளியை பராமரிக்கவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான மருத்துவ வல்லுநர் நதீகா ஜானகே இதனைத் தெரிவித்தார். கோவிட் – 19 டெல்டா...

நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 5 பேர் கொரோனாவுக்கு பலி!

நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் கொவிட் தொற்றுக்குள்ளான 5 பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர், விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது பதிவாகும் தொற்றாளர்களை விட பல மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், இதுவரை...

விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த வயோதிபப் பெண்ணுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று!

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. “நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீடு நோக்கி நடந்து சென்ற அவரை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது. விபத்தில் படுகாயமடைந்த வயோதிப் பெண் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் மேலதிக சிகிச்சைக்காக நேற்றிரவே...

கொரோனா வைரஸினால் மேலும் 124 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 987 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில். இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 75 ஆண்களும் 49 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா – தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியானது. அதனையடுத்தே அவருடன் பழகியவர்களை சுகாதாரப் பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்....

யாழில் பேருந்து குடைசாய்வு – பலர் காயம்!

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைதுள்ளனர். காரைநகர் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கல்லுண்டாய் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய...

PCR மற்றும் ANTIGEN பரிசோதனைகளுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம்!!

தனியார் மருத்து நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பிசிஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும் அன்டிஜன் பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் மாத்திரமே அறவிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நாளை வௌியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸின் ‘எப்சிலான்’ திரிபு பாகிஸ்தானில் அடையாளம் – தடுப்பூசிகளிடமும் திறனில்லை

பாகிஸ்தானில் இருந்து “எப்சிலான்” என்ற உயர் பரிமாற்ற கோவிட்-19 திரிபு பதிவாகியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சுகாதார அதிகாரிகள், கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களிடையே ‘எப்சிலான்’ வைரஸ் அடையாளம் காணப்பட்டதை வெளிப்படுத்தினர். முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்த கோவிட்-19 திரிபுகளை தடுப்பூசிகள் அடக்கும் திறன் கொண்டவை என்று இதுவரை நிபுணர்கள் காட்டியுள்ளனர். ஆனால் தடுப்பூசிகளால் இந்த...
Loading posts...

All posts loaded

No more posts