- Thursday
- April 9th, 2026
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் 10ம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள ஆணையாளர் நாயகம் அதுல கருணாரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10ம் திகதியின் பின்னர் மழையுடனான காலநிலை குறைவடையும் என தெரிவித்துள்ளார். எனினும், பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தெற்கு மற்றும் மேல் கடல் பகுதிகளில் மழை மற்றும் காற்றுடனான...
கொரோனா தொற்று பரவல் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையில், கொரோனா தொற்று தற்போது இலங்கை முழுவதும் பரவி வருகின்றது. அந்த வகையில் யாழ் மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு கொரோனா மரணங்களும் யூலை மாதத்தில் நிகழ்ந்துள்ளன....
நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி...
தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு வழங்கப்படும் என அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதன் பிரகாரம் இன்று காலை 10.30 மணிக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைபவரீதியாக ஆரம்பித்துவைத்தார். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி மூன்றாவது கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கினார். இதன்போது...
021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளன. இதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். புத்தளம் பகுதியில் எரிபொருள் நிலையம் அருகில் காத்திருந்த நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிபொருள் பெற்றுக்கொள்ள லொறி ஒன்றில் காத்திருந்த 63 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொருவரும் தமக்கான தடுப்பூசி டோஸ்களை பெற வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ்கள் பெறப்படுவது குறைந்துள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும்...
டீசல் கப்பலுக்கான கட்டணத்தை நேற்று வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று டீசல் கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என மைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மற்றுமொரு பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்குமான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் எரிசக்தி அமைச்சர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை...
உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதன்படி, உலோக நிறுவனமான MMK மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய தொடர்புடையது என அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. அமெரிக்க திறைசேரி இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் புட்டினுடன் நெருங்கிய உறவைக்...
ந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. முதற்கட்டமாக கம்பஹா, தெஹிவளை, ஹகுரன்கெத்த, குருநாகல், இரத்தினபுரி, தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்ற...
யாழ். ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில் ஆரம்பித்து காலை 8 மணியளவில் நிறைவடைந்தது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிப் பேரணி அங்கிருந்து ஆடியபாதம் வீதி வழியாகக் கொக்குவில் சந்தியை அடைந்து, அங்கிருந்து கே.கே.எஸ் வீதி வழியாக...
இந்தியாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு முதல் மரணம் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் கேரள மாநில சுகாதாரத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐக்கிய அரபு...
இலங்கை மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள சவாலான சூழலிருந்து மீள்வதற்கு கட்சிகள் அனைத்தும் தமக்கிடையேயான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை கடந்து ஓரணியாகச் செயலாற்ற முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அவர் விடுத்துள்ள அந்தச் செய்தியில் மேலும்...
முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த நடைமுறை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் முகக்ககவசம் அணியாது பஸ்களில் பயணிப்பவர்கள், பொது...
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி முறை அல்லது QR முறைமையின் படி எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. QR முறைக்கு பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்களுக்கு வருமான உரிமத்தைப் பயன்படுத்தி பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும்...
எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து அகற்றப்பட்ட இராணுவப் பாதுகாப்பை மீள வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பெற்றோலிய விநியோகத்தர் சங்கத்தின் இணைச் செயலாளர் நாவுதுன்ன தெரிவித்துள்ளார். இராணுவப் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடமையாற்றும் பட்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும்...
எரிபொருள் விநியோகத்தின் போது இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய எரிபொருள் உரிமத்தின் QR இலக்கத்திற்கு புறம்பான வகையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகள் குறித்து இவ்வாறு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் பற்றிய புகைப்படங்கள் காணொளிகள் என்பவற்றை 0742123123 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்...
நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக கடுமையான மழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய,மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும்,தென்மேற்கு கடற்பகுதியிலும் மழை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல்,மத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை...
இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டிருந்த கட்டணத் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. சுமார் 50 பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் நேற்றைய தினம் கருத்துக்களை பெற்றுக் கொண்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்சாரக்...
தமிழக நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன், தனது நலன்புரிச் சங்கத்தின் மூலம் இலங்கைக்கு உதவ விரும்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஷ்வரனின் அழைப்பின் பேரில் கடந்த 24 ஆம் திகதியன்று கமல்ஹாசன், சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்துக்கு சென்றுள்ளார். இதன்போது இலங்கையின் இயற்கை அழகு மற்றும் சினிமா துறை குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
Loading posts...
All posts loaded
No more posts
