ஜனாதிபதியிடம் இருந்து விக்னேஸ்வரனுக்கு கடிதம்!

இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 21 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. இந்த சந்திப்பு தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சீ.வி. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கொழும்பில் இல்லாத சமயம், சுமந்திரன் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்ததாக, குற்றாச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சந்திப்பினை ஒத்திவைக்கக்கோரி...

ஊர்காவற்துறை பொலிஸாரின் முன்மாதிரியான செயற்பாடு – குவியும் பாராட்டுகள்

ஊறுகாவற்துறை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விதானபத்திரன உட்பட்ட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்றிரவு (வியாழக்கிழமை) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது வீதியில் பணப்பை ஒன்று இருப்பதனை அவதானித்தனர். குறித்த பையினை எடுத்துப் பார்த்தவேளை அதனுள் 35 ஆயிரம் ரூபா பணம், தங்க ஆபரணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன காணப்பட்டன. அந்தப் பணப்பை ஊர்காவற்துறை...
Ad Widget

கிளிநொச்சி பளை பஸ் விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி பளையில் விபத்துக்குள்ளான பஸ் சாரதியை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்று செவ்வாய்க்கிழமை (டிச 21) மாலை கிளிநொச்சி பளைப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியதுடன் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் இளம்...

சீனாவில் பரவும் ஒமிக்ரோன் – இலங்கையிலும் பரவும் அபாயம்

சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர். இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் உள்ளது. இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில்...

ஆறு நிமிடத்தில் பிரித்தானியா அழியும்..! ஆண்டின் இறுதியில் புடின் வகுத்துள்ள பயங்கர திட்டம்

பிரித்தானியாவை 6 நிமிடங்களில் தாக்கி அழிக்கும் பயங்கரமான 'சாத்தான் அணு ஆயுத ஏவுகணையை' போர் தாக்குதலில் பயன்படுத்தபோவதாக ரஸ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு முதல் முறையாக டிசம்பர் 21ம் திகதி புதன்கிழமை வெளிநாட்டு சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை...

நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது!! – றவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் எச்சரிக்கை!!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண்துடைப்புக்காக மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள ஓ.எம்.பி அலுவலகத்தை உடனடியாக மன்னாரில் இருந்து அகற்ற வேண்டும். அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் ஒன்றினைந்து அகற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை...

நெடுந்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமையின் பின்னர் நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, நாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தென் பகுதியிலிருந்தும் அதிகளவு மக்கள் வருகை தந்து நெடுந்தீவில் உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிடுகின்றனர். வடக்கு மாகாணத்தில் சுற்றுலா மையங்கள் அதிகமாக உள்ள நெடுந்தீவு பகுதியில் 550 வருடம் பழைமை வாய்ந்த மரம், வெளிச்சவீடு, ஒல்லாந்தர்...

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (புதன்கிழமை) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின. ஈழ...

ஜனவரி மாதம் மின் கட்டணம் கட்டாயம் அதிகரிக்கும் !

ஜனவரி மாதம் மின் கட்டணத்தை அதிகரிப்பது கட்டாயம் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 02ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார பிரச்சினையில் மக்களை தவறாக வழிநடத்தும் மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும்...

யுக்ரைன் ஜனாதிபதி இன்று அமெரிக்கா செல்கிறார்!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலேன்ஸ்கியும் வெள்ளை மாளிகையில் இன்று புதன்கிழமை சந்திக்கவுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரு தலைவர்களும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், யுக்ரைனுக்கான இராணுவ உதவிகள் தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்படும் எனவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்பேச்சுவார்த்தை விபரங்கள் வெளியிடப்படவில்லை. ...

நாளை முதல் முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. குறைக்கப்பட்ட விலைகள் டிசம்பர் 21 முதல் அமுலுக்கு வரும் என லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெரிய வெங்காயம் 5 ரூபாய் குறைக்கப்பட்டு 185 ரூபாயாகவும் சிவப்பு பருப்பு 7 ரூபாய் குறைக்கப்பட்டு...

டக்ளஸ் தரப்பினரின் தீர்மானத்தினால் சிக்கலில் மணிவண்ணன்!

யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க...

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்!

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை...

தீவிரமடையும் டெங்கு நோய் தொற்று! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

2023 ஆம் ஆண்டு நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தேசிய...

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!!

புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் ஊழியர்களின் முயற்சியின் பயணாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 1200 பணியாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் தீ ஏற்பட்ட வேளையில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஊழியர்களின் கடின முயற்சியால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்போது மின்சாரம் தாக்கியதில் பணியாளர்...

5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றது அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை !

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும். இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக...

வில்லிசை கலைஞர் விஜயநாதன் காலமானர்!

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் , அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்துள்ளாா். அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இறைபதமடைந்த விஜயநாதனின் இறுதிச் சடங்குகள் அன்னாருடைய இல்லத்தில் இன்றைய தினமே இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது....

கோவில் பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும்! – ரத்தினசபாபதி குருக்கள்

ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்துக்கள் ஆகிய நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலய ஆதீன குரு ரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாவலர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். வரலாற்று பிரசித்தி பெற்ற காரைநகர் சிவன் ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்வதா? திருவம்பாவை உற்சவத்தினை நடத்துவதா?...

இறக்குமதி செய்யப்படும் 10 பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று(செவ்வாய்கிழமை) முதல் அமலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு துறை அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் என்பன இதில் அடங்குவதாக...

மியன்மார் அகதிகள் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைப்பு!

யாழ்.மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ். சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts