- Tuesday
- June 10th, 2025

தாக்குதல் சூத்திரதாரிகளின் புகைப்படங்களை அடையாளம் காட்ட வைத்தியர் மறுப்பு: காது, மூக்கு, தொண்டை வைத்திய வைத்திய நிபுணரின் தாக்குதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட சிலரின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்ட நிலையில் வைத்தியர் அடையாளம் காண்பிக்க தவறுகின்றதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்;ற நிலையில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். (more…)

யாழ்ப்பாணம் நாவந்துறைக் கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. (more…)

வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

அரசு அல்லாத நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசு நிறுவனங்கள் ஒவ்வொரு திட்டமும் கண்டிப்பாக அங்கீகாரம் பெற்ற பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வட மாகாண ஆளுநர் ஜிஏ. சந்திரசிறி அவர்கள் வலியுறுத்தி உள்ளார். (more…)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவ தளபதியினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைச் சபையின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை, பாதுகாப்பு செயலாளரிடம் வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. (more…)

இடது காலிலுள்ள கட்டியென்றை அகற்றுவதற்காக சத்திரசிகிச்சை மேற்கொள்ளச் சென்ற 9 வயது பாடசாலை மாணவன் ஒருவருக்கு வலது காலில் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியரொருவர். இச்சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.இவ்வனர்த்தம் கோப்பாய் வடக்கு இலகடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான இராசதுரை திருவானந்தத்தின் மூன்றாவது மகனான கயலக்ஷன் என்ற பாடசாலைசாலை சிறுவனுக்கே...

உள்நாட்டு போரின் போது இலங்கை தமது சொந்த ஒழுங்கு நடைமுறை ஒன்றை கைக்கொள்ள வேண்டும் என்று இலங்கை இராணுவம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. (more…)

இலங்கையில் இருந்து சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்களாக செல்வோருக்கான வயது எல்லை குறைந்தது 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (more…)

கொழும்பிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்விகற்கும் இரு மாணிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்த கல்லூரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (more…)

தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் பொருட்டு, யாழ்ப்பாணத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையங்களை நிறுவுவதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் சிவில் நிர்வாகமே இடம்பெற்று வருகின்றது. தெற்கில் இராணுவ முகாம்கள் இருப்பதைப் போன்றே வடக்கிலும் அவசர தேவைகளுக்காக இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

கனகரத்தினம் மகாவித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக சென்.ஜேம்ஸ் மகளிர் கல்லூரி அதிபரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். (more…)

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு தரப்பினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமல் போகவில்லை' என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். (more…)

இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தரவுகளில் மாற்றம் ஏற்படுத்தியமை தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி பாதுகாப்பு அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. (more…)

யாழ். பண்ணையில் அமைந்துள்ள முத்தமிழ் அரங்கம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். (more…)

கடந்த ஆண்டில் புதிதாக 2411 புதிய சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளார். (more…)

யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு 15 படகுகளும் 15 இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. (more…)

பாடசாலைமட்ட, கோட்ட மட்ட, வலய மட்ட, மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது பிரதம விருந்தினர்களாக அழைக்கப்படுவோர் குறித்துத் தீர்மானித்த பின்னர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் அதற்குரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (more…)

All posts loaded
No more posts