இடி மின்னல் – தொலை பேசி பாவனை அவதானம்

இடி மின்னலுடனான காலநிலையில் வெளியிடங்களில் கையடக்க தொலை பேசிகளை பாவிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு தொலை தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (more…)

வாள் வெட்டு: இளைஞன் கைது

யாழ்ப்பாணம், கலிகை பகுதியில் இருவர் மீது வாள்வெட்டை மேற்கொண்டதாக கூறப்படும் 18 வயது இளைஞனை புதன்கிழமை(1) கைதுசெயத்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

9 வருடங்களின் பின் வெட்டப்பட்ட தாடி!

மீனவர்களுக்கான இறங்குதுறையொன்று நிர்மாணிக்கும் வரை தனது தாடியை வெட்ட மாட்டேன் என கடந்த 9 வருட போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரின் தாடி, மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று (02) வெட்டப்பட்டது. (more…)

இனவாத நடவடிக்கையினை எதிர்ப்போம்- பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. (more…)

நவம் குறூப் கைது

மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் நடமாடிய 4 பேர் நேற்றிரவு 9 மணியளவில் சுன்னாகம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (more…)

இந்தியாவை தூய்மை படுத்த பிரதமர் மோடி அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். (more…)

எபோலாவால் தாய், தந்தையரை இழந்து தவிக்கும் 3,700 குழந்தைகள்! நிதி உதவியை எதிர்பார்கும் யுனிசெவ்

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கயானா, லிபரா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ஆட்கொல்லி "எபோலா" நோய் வேகமாக பரவி வருகிறது. (more…)

பிக்குமாருக்கு சாணி வீசிய சிங்கள மக்கள்

ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிக்கு மாணவர்கள் சிலர், இன்று வியாழக்கிழமை (02) முற்பகல், சுமார் 40 நிமிட நேர ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். (more…)

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை

முல்லைத்தீவு பிரதேச மாணவர்கள் பலர், பாடசாலைக் கல்வியைப் புறக்கணித்துவிட்டு வீடுகளிலும், வேலைத்தளங்களில் பணிபுரிந்துகொண்டும் இருப்பதாக தெரிவித்த மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன, (more…)

ரூ.5 கோடி கேட்டு இரத்தினபுரி பெண் வழக்கு

இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பெண், தன் மீதான தாக்குதலுக்கு எதிராக 50 கோடி ரூபாய் அபராதம் கேட்டு இன்று வியாழக்கிழமை (02), உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். (more…)

ஜெயலலிதாவின் கைதால் பாதிப்படைகிறது வடமாகாண சபை – குணதாச அமரசேகர

தமிழக முன்னாள் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளமையால் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது போயுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். (more…)

ஐ டீசர் குறித்து பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்!

ஐ டீசர் சமீபத்தில் வெளிவந்து 70 லட்சம் ஹிட்ஸை தாண்டி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் வெளிவந்த போது பல திரைப்பிரபலங்கள் விக்ரம் மற்றும் ஷங்கரை வாழ்த்தி தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர். (more…)

லிங்கா படத்தில் ரஜினியுடன் திரிஷா நடனம்?

லிங்கா படத்தில் ரஜினியுடன் திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. (more…)

வடக்கு முதல்வர் வடக்கின் அமைச்சர்கள் சகிதம் மன்னாரில் மக்கள் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, ப.சத்தியலிங்கம், பா.டெனீஸ்வரன் சகிதம் மன்னாரில் மக்கள் குறை கேட்கும் சந்திப்பு ஒன்றை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30.09.2014) மேற்கொண்டுள்ளார். (more…)

வடக்கில் முதியோர் நிலை கவலைக்கிடம்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில் இலங்கை 43 ஆவது இடத்தில் உள்ளது. (more…)

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை ரூ.8 கோடி செலவில் புனரமைக்கிறது அரசு!

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தைப் புதுப்பிப்பதற்காக அரசாங்கம் 8 கோடி 68 லட்சத்து 80 ஆயிரத்து 36 ரூபாவை ஒதுக்கியுள்ளது. (more…)

அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் ஓரணியில் இணையத் தயார் – ஐ.தே.கட்சி

"மஹிந்த அரசின் அறிவிப்புக்கமைய தேசியத் தேர்தலொன்று நடத்தப்பட்டால், இந்த அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒரே அணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது." (more…)

வட மாகாணம் தழுவிய ரீதியில் முதியோர் கழகங்கள் உருவாகும்! – ஆளுநர்

முதியவர்கள் நன்மைகளை அனுபவிக்கும் பொருட்டு வட மாகாணம் தழுவிய ரீதியில் முதியோர் கழகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் முதியவர்கள் பெரும் நன்மைகளை அடைய முடியும் - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி. (more…)

பெண்கள் பாதுகாப்பு நிலைய அடிக்கல் நாட்டுவிழா

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 10 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள பெண்களுக்கான பாதுகாப்பு நிலையததுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (01) அச்சுவேலியில் இடம்பெற்றது. (more…)

ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனை பற்றி இலங்கை அரசு என்ன சொல்கிறது?

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அது குறித்து நாங்கள் விமர்சிக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் கெஹலியா ராம்புக்வெல்லா தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts