உக்ரைன் தலைநகரில் ஒலிக்கும் அபாய சப்தம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடையும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. ரஷ்யாவின் முக்கிய நகரமான கிரிமீயா மற்றும் மாஸ்கோ நகரத்தின் மீது நடந்த உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதலையடுத்து எந்த நேரத்திலும் ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது பதிலடி தாக்குதல் நடத்தும் எனவும் உக்ரைன்...

ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு!

வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் வடமாகாண ஆளுநரின் மக்கள் ஒழுங்கமைப்பு தொடர்பாடல் அலுவலகம் இன்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சினால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆளுநரை தொடர்பு கொள்வதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறித்த அலுவலகம்...
Ad Widget

வறட்சியான காலநிலையினால் வடக்கில் தீ விபத்துக்களுக்கு சாத்தியம்!!

வடமாகாணத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தீ விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல தீ விபத்துக்கள் வடக்கின் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளன. வவுனியா இரட்டைப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் சனிக்கிழமை (22)...

24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து : முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ், 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இதற்கிடையில், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே...

மது போதையில் அரச ஊழியரை தாக்கிய வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்!!

யாழ்.ஊர்காவற்துறை - காரைநகர் பாதை சேவையில் அரை நிர்வாணமாக மதுபோதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடல்...

நல்லூர் கந்தனை தரிசித்த பாப்பரசரின் பிரதிநிதி!!

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள் அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க...

வடக்கு கிழக்கு பூரண கடையடைப்பு: யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.07.2023) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. குறித்த ஊடக...

வவுனியாவில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன் மரணம்!!

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா...

பகிரங்கமாக தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரைன் இராணுவம்!

ரஷ்யாவின் மற்ற ஏவுகணைகளை, உக்ரைன் இராணுவம் சுட்டுவீழ்த்தி வரும் நிலையில், 'பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட்' ஏவுகணையை மட்டும் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 20ஆம் திகதி ஒடெசா நகரம் மீது, ரஷ்யா இராணுவம், காலிபர், இஸ்கந்தர், பி-800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. காலிபர், இஸ்காந்தர் ஏவுகணைகளை...

குருந்தூர் மலை விவகாரம் : அகத்தியர் அடிகளார் முன்வைத்த கோரிக்கை!

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அண்மைகாலமாக ஆதிசிவன் திருக்கோவில்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு சைவத்தமிழ் தொன்மங்கள் பௌத்த சிங்கள தொன்மங்களாக மாற்றியமைக்கப்பட்டு...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 323.03 ஆகவும் விற்பனை விலை 336.16 ஆகவும் பதிவாகியுள்ளது. மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 329 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி 24ஆம் திகதி டொலருக்கு...

கடவுசீட்டுப் பெறுவதில் திடீர் சிக்கல்!

ஒன்லைன் மூலம் கடவுசீட்டினைப் பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் , சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந்துள்ளதால் மக்கள்அலைச்சல், நேரவிரயம் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி இன்றும் முறியடிப்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவிருந்த கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தது. அவர்களை வழிமறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி என்றும் இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க...

குழந்தையின் சடலத்துடன் காத்திருந்த தாய்: அதிருப்தி வெளியிடும் அங்கஜன்

குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் உயிரிழந்த தன் குழந்தையின் சடலத்துடன் தாயார் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்ட போது ,அவர் நோயாளர் காவு வண்டியில் சடலத்துடன் நீண்ட நேரம் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி தொடர்பில் தான் ஊடகங்கள்...

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி! யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!!

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தைநேற்றைய தினம் (24) தாய்...

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் ‘கேளன்‘

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இக்குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. குவியம் மீடியா நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர்...

யாழில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) சடலமாக மீட்கப்பட்ட விடயம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்ட வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட...

வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி – பொலிஸார் வெளியிட்ட தகவல்

வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த கும்பலுக்கு அவசியமான பிரபல குண்டர் ஒருவரையே தேடி வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த கும்பல் அந்த பிறந்த நாள் வீட்டிற்கு வந்த போது, ​​அவர்கள்...

உக்ரைன் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது: குற்றம் சுமத்தும் ரஷ்யா

மாஸ்கோ மீது உக்ரைன் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தி பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியிருப்பதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், ரஷ்ய தற்காப்பு அமைச்சின் கட்டடங்களிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சிதைவுகள் காணப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு ஆளில்லான வானூர்திகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின்...

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது. அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை...
Loading posts...

All posts loaded

No more posts