250 இந்திய படகுகளுக்கு அனுமதி வழங்கப்போகின்றதா இலங்கை?

வரை­ய­றுக்­கப்­பட்ட நாட்­களில் 250 இந்­திய மீனவ பட­குகள் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­வது குறித்து இலங்கை அர­சாங்கம் ஆராய்ந்­து­வ­ரு­வ­தாக இந்­திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்­டுள்­ளது.

இந்­திய மீன­வர்­க­ளினால் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் மேற்­கொள்­ளப்­படும் அழி­வு­களை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கி­லேயே அர­சாங்கம் இந்த முடி­வுக்கு வந்­துள்­ள­தாக அந்த ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.

தற்­போ­தைய நிலை­மையில் தினம் ஒன்­றுக்கு 3000 இந்­திய மீனவப்பட­குகள் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி பிர­வே­சித்து சட்­ட­வி­ரோத மீன்­பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தா­கவும் எனவே இவ்­வாறு 250 இந்­திய மீனவ பட­கு­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிப்­பது இலங்­கைக்கு நன்­மை­யா­கவே அமையும் என்று இலங்கை அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டி­ய­தாக நியு இந்­தியன் எக்ஸ்­பிரஸ் ஊடகம் குறிப்­பிட்­டுள்­ளது.

மேலும் இலங்­கையில் இழுவைப் படகு முறை­மை­யி­லான மீன்­பிடிக்கு தடை கொண்­டு­வரும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மை­பபின் பாரா­ளு­மன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் பிரேரணையொன்றை கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

Related Posts