யாழ்ப்பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றபட்ட விவகாரம் – துணைவேந்தரிடம் விசாரணை!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக...

இரத்த வங்கி ஆபத்தான நிலையில்!! இரத்த தானம் செய்ய கோரிக்கை!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி...
Ad Widget

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று, ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, பொலிஸார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்டோர கேஸ் நிறுவனமும் நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 3,990 ரூபா. 05 கிலோ சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,602 ரூபா....

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு – அரசாங்கம்

உலக சந்தையில் மசகு எண்ணெயை விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மக்களின் நலன் கருதி மிகக் குறைந்த அளவிலேயே விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 36 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள பின்னணியில், இலங்கையிலும்...