Ad Widget

புளொட் அமைப்பின் உறுப்பினருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி அதிரடித்தீர்ப்பு!

வவுனியாவில் வைத்தியர் ஒருவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டம் ஆரம்பித்து 2300 ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது...
Ad Widget

நெடுந்தீவில் 38 பேரின் உயிரை காப்பாற்றிய கடற்படை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் நேற்று (07) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இவர்களை மீட்டுள்ளனர். கப்பலில் இருந்த கட்டுமானப் பொருட்கள் மூழ்காத வகையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவுக்கு 38 பேருடன்...

சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும் : கஜேந்திரகுமார்

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நேற்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட...

ரஷ்யாவின் மற்றுமொரு தாக்குதல்! உக்ரைனில் காற்றில் கலக்கும் விஷ வாயு!!

உக்ரைனில் உலகின் மிகப்பெரிய அம்மோனியா குழாய் வெடித்து விஷ வாயு காற்றில் கலப்பதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள Masiutovka கிராமத்தில் செல்லும் குழாய் வெடித்து அப்பகுதி எங்கும் மேக மூட்டமாக வாயு காற்றில் கலப்பது காணொளி ஒன்றில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக குறித்த குழாய் வெடிப்பு நேர்ந்திருக்கலாம் என்று...