Ad Widget

நெடுந்தீவில் 38 பேரின் உயிரை காப்பாற்றிய கடற்படை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு நுழைவாயிலில் விபத்துக்குள்ளான இழுவை படகில் இருந்து 38 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் நேற்று (07) காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இவர்களை மீட்டுள்ளனர்.

கப்பலில் இருந்த கட்டுமானப் பொருட்கள் மூழ்காத வகையில் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவுக்கு 38 பேருடன் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற இழுவை படகு நெடுந்தீவின் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் அதிக அலை காரணமாக கப்பலின் அடிப்பகுதியில் மோதியுள்ளது.

குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதாக வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல்கள் வசப நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது.

இந்த அறிவிப்பிற்கு பதிலளித்த கடற்படையினர், இலங்கை கடற்படை கப்பல்கள் வசப நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள கரையோர ரோந்து கப்பல்கள் மற்றும் சிறிய கப்பல்களை பயன்படுத்தி கப்பலையும் அதில் இருந்தவர்களையும் பத்திரமாக மீட்டனர்.

நெடுந்தீவின் துறைமுக நுழைவாயிலில் ´காளி அம்பாள் 2´ கப்பல் மூழ்கியிருந்தால், நெடுந்தீவிற்கான அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு அதன் நிர்வாகம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.

Related Posts