Ad Widget

தமிழகத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் பலி!

தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 19, 20 மற்றும் 21 வயதுடைய தயாளன், ஜோன் மற்றும் சார்லஸ் ஆகிய மூன்று இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளனர். எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன்...

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு!! – 09 பேர் கைது!!

தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை, அகற்ற கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவர், நான்கு பெண்கள் உள்ளிட்ட 09 பேர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையை அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் அவரது கட்சி உறுப்பினர்கள்...
Ad Widget

எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் இல்லை!!

எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான இயலுமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு எரிபொருள் கோட்டா முறையில் மாற்றம் ஏற்படுத்தாதிருக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதேவேளை சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், எரிபொருள்...

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் வெடித்தது போராட்டம்!

தையிட்டியில் தமிழர்களின் காணிகளை பலவந்தமாக பறித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்றையதினமும் (22) தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பேச்சாளர் க.சுகாஸ் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விகாரையை எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக...

மாணவியுடன் அங்க சேஷ்டை செய்த தமிழ் இராணுவ சிப்பாய்!!

யாழ்.வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்று திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில்...

ஆசிரியைக்கு கடமை நேரத்தில் அழகு குறிப்பு கொடுத்த ஆசிரிய ஆலோசகர்!!

யாழ்.கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பாடசாலைக்குச் சென்று பெண் ஆசிரியையை பார்த்து கிறீம் பூசுவதில்லையா? பூசினால் அழகாக இருப்பீர்கள் என கூறிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியை உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார். நேற்றைய தினம் யாழ்.கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றுக்கு கடமை நிமித்தம் சென்றிருந்த குறித்த ஆசிரிய ஆலோசகர் எந்த அறிவிப்பும்...

யாழ்.பல்கலைகழக களஞ்சியத்திலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மாயம்!! விசாரணை நடக்கிறது!! – துணைவேந்தர்

யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டட உபகரணங்கள் காணாமல்போனமை தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறுகிறது என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்தில் இருந்த பொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெறுகிறது என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

யாழில் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேர் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொலிஸாரால் நேற்று (22.05.2023) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரும் ஹெரோய்ன் பயன்படுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனும் உள்ளடங்கியுள்ளார். அத்துடன் போதைப்பொருள்களை விநியோகிப்பவர் ஒருவரும் இதில் உள்ளடங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் டினிப்ரோ என்ற நகரின் மீது ரஷ்யா நள்ளிரவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்த பாக்முத் நகரை போராடி முழுவதுமாக கைப்பற்றியதாக ரஷ்ய இராணுவத்தளபதி யெவ்கெனி பிரிகோஷின் பிரகடனம் செய்த நிலையில், அதற்கான ஆதாரத்தை வாக்னர் ஆயுதக்குழு வெளியிட்டுள்ளது. உக்ரைனின்...