Ad Widget

வீட்டுப் பணிக்காக அரபு நாடு சென்றிருந்த மனைவியை காணவில்லை! கணவன் முறைப்பாடு!!

அரபு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றிருந்த பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெண்ணின் கணவனும், பிள்ளைகளும் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் முறைப்பாடு வழங்கியிருக்கின்றனர். 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இவர் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் இயக்கச்சி, கிநொச்சி என்னும் முகவரியைக் கொண்டவர் எனவும்...

ஆட்டிறைச்சி எலும்பு மார்பு பகுதியில் சிக்கியதால் குடும்ப பெண் பலி!

ஆட்டிறைச்சி எலும்பு மார்பு இரத்த குழாயில் சிக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம்...
Ad Widget

மக்களை ஏமாற்றி பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது

அதிஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என தொலைபேசிமூலம் அழைத்து மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில பணமோசடி செய்து ஏமாற்றிய பண்டாரகம அட்டுளுகம, பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை யாழ் விசேட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். யாழ்மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு அதிஷ்டகார் ஒன்று கிடைத்துள்ளதாக Ez Case மூலம் 24...

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி : தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது....

கீரிமலை சிவன் கோவில் இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைப்பு! சைவ மக்கள் கடும் கண்டனம்

கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து அழிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வலி. வடக்குப் பகுதியில் உள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் ஆலய நிர்வாகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையினர் பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று ஆலயத்தின் தற்போதைய நிலையை பார்வையிட்ட போது இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கீரிமலை சிவன்...

உக்ரைன் யுத்த கைதியை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற ரஷ்ய படை!

உக்ரைனின் நிராயுதபாணியான போர்க் கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பதுங்குழியொன்றில் இருந்த உக்ரைன் போர் வீரரை சுட்டுக்கொல்லும் காணொளியும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டை சேர்ந்த போர்க்கைதியை சுட்டுக்கொன்ற ரஸ்ய படையினரை கண்டுபிடிக்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளதுடன் கொலைகாரர்களை நாங்கள் கண்டுபிடிப்போம் என்றும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர் கைதி,...