Ad Widget

தேர்தல்கள் பிற்போடப்படலாம் ?

தபால் வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கட்சி தலைவர்களுக்கு அறிவித்துள்ளமை உள்ளுராட்சி தேர்தல்கள் பிற்போடப்படலாம் என்பதற்கான அறிகுறி என ஆங்கில செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. நாளை இடம்பெறவிருந்த தபால்வாக்குசீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்....

விபத்தில் உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு இன்று அஞ்சலி!

விபத்தில் உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு.றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும் மறைந்த மு.றெமீடியஸ்க்கு யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தினர். யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் கடந்த 7ஆம் திகதி சிறுப்பிட்டி...
Ad Widget

இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், தயிர் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரிங் ஹாப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் தடை...

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீண்டும் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.முன்பதாக அன்றைய முதல்வர் மணிவண்ணன் சமர்ப்பித்த 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் இரண்டாவது சந்தர்ப்பத்துக்கு செல்லும் ஆற்றல் இன்மையால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து புதிய முதல்வராக பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட்...

பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என ஏன் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியவில்லை?? சிவாஜி

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் ஏன் அதனை உறுதி செய்யவில்லை? என தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்...

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது!!

பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று (14) முற்பகல் 9:30 மணியளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் சபையில் பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழ் அரசியல் பரப்பில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது....

‘‘விடுதலைப்புலிகளின் தலைவர் வருவார் என்ற போது உயிரிழந்த செய்தியை தேடி அலைய தேவையில்லை’’ சிறீதரன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் வருவார் என்ற போது உயிரிழந்த செய்தியை தேடி அலைய வேண்டிய தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும், நலமுடனும் இருப்பதாகவும்,உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். ஆனால் எங்கு உள்ளார் என்பதினை தற்போது அறிவிக்க இயலாது' எனவும் உலக...

லண்டன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த புடின் ஆதரவாளர் அழைப்பு!!

லண்டன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த புடின் ஆதரவாளர் அழைப்பு விடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மீது ஏன் நாம் தாக்குதல் நடத்தக்கூடாது என புடின் ஆதரவாளர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையிட்டு கேள்வியெழுப்பியுள்ளார். புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். Solovyev "bombs" London and...