Ad Widget

பயணத்தடையை நீக்குவது பற்றி 19 அல்லது 20இல் தீர்மானம்!!

நாடுமுழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த முடிவை ஜூன் 19 அல்லது 20ஆம் திகதிகளில் மட்டுமே எடுக்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இணையவழி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை...

பயணத்தடை திகதி மேலும் நீடிக்கப்படவேண்டும் – சுகாதாரத் துறை வலியுறுத்து

பயண தடை திகதி மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் பின்பற்றப்படாவிட்டால், தற்போதைய சூழ்நிலையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அப்படியானால்...
Ad Widget

பொலிஸார் எனத் தெரிவித்து பொலிஸாரையே ஏமாற்ற முயன்ற இருவரை மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!!

பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான்...

நயினாதீவு கடலில் கரையொதுங்கும் மருத்துவக்கழிவுகள் – அச்சத்தில் மக்கள்!

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் போட்ட நிலையில் இங்கு, வந்தவையா என்ற குழப்ப நிலையே காணப்படுவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை நேற்று(திங்கட்கிழமை) கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு...

யாழ்.நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென 200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் அரச அதிபரினால் வைபவ...

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டி, அவிசாவளை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள்...

பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களின் விலை அதிகரிப்பு!

பாண் தவிர்ந்த அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர். குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ...