- Friday
- April 26th, 2024
யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் நேற்றைய தினம் (28) யாழ் குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற உருளைக்கிழங்கு அறுவடைவிழாவிற்கு பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார். குறிந்த நிகழ்வில் அறுவடைக்கு தயாரான...
இன்றிலிருந்து வெளி மாவட்டத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாகாண ஆளுநரின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்தார். நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபடாத நிலையில் மத்திய...
கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதுடன் நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவர்கள் மீது, தாக்குதல் நடத்தியது 17 வயதுடைய உறவுமுறைச் சிறுவன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த சிறுவனின் சகோதரனான நான்கு வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்....
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி...
மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு நிலாவரை புத்தூர் – இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார். தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அச்சுவேலி பொலிஸார், தாக்குதல் நடத்தியவரைத்...
வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 659 பேரின் பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், மன்னாரில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார்...