Ad Widget

2015-ம் ஆண்டிற்கான உலக அழகியாக பிலிப்பைன்ஸ் அழகி தெரிவு!

2015-ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 24 வயதான, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகி பியா அலோன்ஜோ உர்ட்ஸ்பட்ச் வென்றுள்ளார்.

MissUniverse2015

உலக அழகி போட்டியில் மிஸ் கொலம்பியா அரியட்னா குடியர்ரெஸ் இரண்டாவது இடத்தினையும், மிஸ் யுனிவர்ஸ் யு.எஸ்.ஏ ஒலிவியா ஜோர்டான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் பகுதியில் நேற்று நடந்த 65வது உலக அழகிப் போட்டியின் இறுதி அலங்கார அணிவகுப்பில் உலக அழகிக்கான மகுடம் அவருக்கு சூட்டப்பட்டது. 2014-ம் ஆண்டிற்கான உலக அழகியான கொலம்பியா நாட்டின் அழகி பவுலினா வேகா, புதிய உலக அழகி பியா அலோன்ஜோவுக்கு இந்த மகுடத்தை சூட்டினார்.

miss world-2015

முன்னதாக இறுதி போட்டியாளர்கள் மூன்று பேரிடமும், நீங்கள் ஏன் அடுத்த உலக அழகியாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற பியா அலோன்ஜோ அளித்த பதில் பின்வருமாறு:- “உலக அழகியாக இருப்பது மரியாதைக்குரியது மட்டுமல்ல பொறுப்புமிக்கதும் தான். நான் உலக அழகியாக இருந்தால் இளைஞர்களுக்காக குரல் கொடுப்பேன்.

எச்.ஐ.வி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வை மேற்கொள்வேன். இது தற்காலத்தில் குறிப்பாக எனது நாட்டிற்கு தேவையான ஒன்றாகும்.” இவ்வாறு பேசினார்.

Related Posts