2000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் ஏற்றுமதி உற்பத்திகள் கண்காட்சி இன்று காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த செயலமர்வு மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை தாபிப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியின் திறப்பு நிகழ்வில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, இராஜாங்க அமைச்சரகளான சுஜீவ சேனசிங்க, விஜயகலா மஹேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சும ந்திரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.