Ad Widget

198 தீர்மானங்களில் 41 ற்கே பதில்; சீ.வி.கே

வடக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட 198 தீர்மானங்களில் 41 தீர்மானங்களுக்கு இடைக்காலம், முழுமையான பதில்கள் கிடைத்துள்ளன என அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது,

கடந்த மாகாண சபையின் அமர்வில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மூன்று தீர்மானத்திற்கு மாத்திரமே பதில் கிடைக்கப்பெற்றுள்ளது என உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் கடந்த 21.05.2015 அன்றைய அமர்வு வரை வடக்கு அவையில் 198 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் இடைக்கால அல்லது முழுமையானதாக 41 பதில்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது எமது கடமை. அவ்வாறு தீர்மானங்கள் தொடர்பில் மத்திய அரசு , மாகாண திணைக்களங்களுக்கு அனுப்பி வைப்பது அவைத்தலைவர் , பேரவைச் செயலகத்தினால் மேற்கொள்ளப்படும்.

அதேபோல அமைச்சுக்கள் சார்ந்த விடயங்களையும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts