Ad Widget

16ஆவது சர்வதேச நிழற்பட கண்காட்சி ஆரம்பம்

தேசிய நிழற்பட கலைச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 16 ஆவது சர்வதேச புகைப்படக் கண்காட்சி இன்று (22) யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் ஆரம்பமாகியது.

exbitoon-photography

வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நாடாவெட்டி மேற்படி கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நாளை வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் 27 நாடுகளில் எடுக்கப்பட்ட வறுமை, ஏக்கம், இயற்கை போன்றவற்றை பிரதிபலிக்கும் 168 நிழற்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஐh, தேசிய நிழற்பட சங்கத் தலைவர் சனில் விக்கிரமசிங்க, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் அபயசிங்க, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts