Ad Widget

12-15 வயதுடையோருக்கு 7ஆம் திகதி முதல் தடுப்பூசி!

நாட்டில் 12 தொடக்கம் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 7ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் குறித்த வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts