பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள புகையிரத நிலையங்களின் பணிகளை முடிக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மார்க்க புகையிரத சேவைகள் எதிர்வரும் 13 திகதி யாழ்ப்பாணம் வரை தொடரவுள்ள நிலையில் வேலைத்திட்டங்கள் தொடர்பான அதிகாரிகள் கலந்துரையாடல் இன்று தனியார் விடுதியில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் புகையிரதப்பாதை அமைக்கும் இந்திய நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், புகையிரதத் திணைக்கள அதிகாரிகள், மின்சார சபை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வேலை திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன். எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தி 10 ஆம் திகதி புகையிரதத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு பணித்துள்ளார்.