யாழ். புகையிரத நிலையத்தில் தரித்து நின்ற ரயிலில் ஏறமுற்பட்டு தவறி விழுந்ததில் படுகாயமடைந்த மூதாட்டியொருவர் வியாழக்கிழமை (19), யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியைச் சேர்ந்த கோ.சரோஜாதேவி (வயது 66) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
கொழும்புக்குச் செல்வதற்காக புகையிரத நிலையத்துக்கு சென்ற இவர், ரயிலில் ஏறுவதற்கு முற்பட்டபோது தவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்தார்.