Ad Widget

 பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கிச் சூடு :5 பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரின் விளக்கமறியலையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீடித்து, யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த ஒக்ரோபர் மாதம் 21ஆம் திகதி, கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாண பொலிஸார் ஐவர், கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரணையானது, வியாழக்கிழமை (09) யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.

Related Posts