Ad Widget

 உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் செல்ல முதலமைச்சர் சி.வி.க்கு தடை

வசாவிளான் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உட்செல்ல விடாது இராணுவத்தினர், ஞாயிற்றுக்கிழமை (22) தடுத்து நிறுத்தினார்கள்.

25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) அங்கு சென்றார்.

ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களை சந்தித்தபின், விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடுவதற்காக சென்றார். விடுவிப்பதாகக்கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் வெள்ளிக்கிழமை (20) கட்டுப்பாடு விதித்தனர்.

அதே கட்டுப்பாட்டை வடமாகாண முதலமைச்சருக்கும் இராணுவத்தினர் விதித்தனர். புதிய உயர்பாதுகாப்பு வலய வேலியை தாண்டி முதலமைச்சர் உள்ளே செல்ல இராணுவத்தினர் இடமளிக்கவில்லை.

ஆனால், அந்த வேலி விடுவிக்கப்பட்ட காணிகளை உள்ளடக்கியதாகவே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts