Ad Widget

பாடசாலைக்குள் சென்ற குளவிகளால் 26 பேர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி கண்டாவளை மகா வித்தியாலயத்தைச் சேரந்த 23 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (13) காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் காற்று காரணமாக மேற்படி பாடசாலை வளாகத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து வகுப்பறைக்குள் குளவிகள் புகுந்துள்ளன.

அதன்போதே கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

Related Posts