Ad Widget

ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்? – ஜனாதிபதி ஊடகப்பிரிவு விளக்கம்

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2022-05-03 திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைப்புச் செய்தியைப் பயன்படுத்தி ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிர்வாக அமைச்சுக்கு அவ்வாறான அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த பொய்ப் பிரசாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts