Ad Widget

வௌ்ளைக் கோடுகளாக மாறவுள்ள மஞ்சள் கோடுகள்

இலங்கையில் பாதசாரிகள் வீதிகளைக் கடக்க இடப்பட்டுள்ள மஞ்சள் கோடுகள் அனைத்தையும் டிசம்பர் மூன்றாம் திகதி முதல் வௌ்ளைக் கோடுகளாக மாற்ற தீர்மானித்துள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டம் டிசம்பர் 3ம் திகதி மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து அனைத்து மாகாணங்களுக்கும் இந்த நடவடிக்கையை செயற்படுத்தவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கைகளை ஒரு வருட காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கருத்து வௌியிட்டுள்ளார்.

Related Posts