Ad Widget

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர் உயிரிழந்தார்

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர், செவ்வாய்க்கிழமை(17) மாலையில் உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

15ஆவது கஜபா றெஜிமென்ட் படைப்பிரிவை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் வசந்தகுமார (வயது 35) என்பவரே உயிரிழந்தார்.

கடந்த 15ஆம் திகதி விடுமுறையில் செல்ல கொடிகாமம் புகையிரத நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்த இவரை, பின்னால் வந்த வாகனமொன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றது.

சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த இராணுவ வீரர் பொதுமக்களின் உதவியுடன், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Related Posts