Ad Widget

வைத்தியசாலைக்குள் வாள் வெட்டு, இதுவரை அறுவர் கைது

arrestசாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தினையடுத்து அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஆறாவது சந்தேகநபரான குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

அவரை விசாரணை செய்த நீதவான் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதேவேளை குறித்த வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8பேர் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts