Ad Widget

வேலை கோரும் பட்டதாரிகள் வடமாகாண ஆளுனரை சந்தித்து அவசர வேண்டுகோள்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண ஆளுனரை சந்தித்து அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் முகமாக அரச வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு உள்ளது.

அதில் 35 வயதிற்கு உட்பட பட்டதாரிகளே நியமனத்தில் உள்வாங்க படுவார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனால் பலர் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்து 35 வயதிற்கு மேற்பட்ட வேலை கோரும் பட்டதாரிகள் , வடமாகாண ஆளுனரை சந்தித்து குறித்த வேலை வாய்ப்புக்கான வயதெல்லையை 45 ஆக உயர்த்துமாறு கோரி மகஜர் ஒன்றினை கையளித்தனர்.

குறித்த சந்திப்பு நேற்று மதியம் வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தில் நடைபெற்றது

Related Posts