வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் அரசாங்க வேலைவாய்ப்பை வழங்கக் கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 1௦ மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.
வடமாகாணத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வேலையில்லா உள்வாரி, வெளிவாரி, தேசிய உயர் தொழில்நுட்ப பட்டதாரிகள் அனைவரையும் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர் இ. பிரதாபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.