Ad Widget

வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைக்குமாறு ஆலோசனை!!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கவனத்திற்கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்யும் மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கி யோசனைகளை முன்வைத்துள்ளது.

அதன்படி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நேரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களிலிருந்து வேலைசெய்யும் பணியாளர் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தமது பணிகளை மேற்கொண்டு நேரகாலத்தோடு வீடுகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய வங்கி குறித்த யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தனியார் வாகன பாவனையினை குறைத்து பொது போக்குவரத்துக்களை முடிந்தளவு பயன்படுத்துமாறும் மூலம் மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது மத்திய வங்கியின் ஆளுநரினால் மேற்படி யோசனை அரசாங்கததிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts