Ad Widget

வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இளைஞன் பலி

யாழ்.அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கு, நெருப்பு மூட்டி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், நாவற்குழி பகுதியை சேர்ந்த சஜீவன் (வயது – 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ். பருத்தித்துறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts