Ad Widget

வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியிலிருந்து சடலம் கண்டெடுப்பு

வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டு, கடற்கரை பகுதியில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இனங்காணப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts