Ad Widget

வெளிநாட்டில் உள்ளவரின் காணி உறுதியை ஈடு வைத்தவர் விளக்கமறியலில்!!

வெளிநாட்டில் உள்ளவரின் காணியை உள்நாட்டில் ஈடுவைத்து பணம் பெற்ற மோசடி குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியின் உறுதியை பதிவு ஒன்றுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினரிடம் கொடுத்துள்ளார்.

அந்த உறவினர் அக்காணி உறுதிப் பத்திரத்தை உள்ளூரில் நபர் ஒருவரிடம் 12 இலட்ச ரூபாய்க்கு ஈடுவைத்து பணம் பெற்றுள்ளார்.

இதையறிந்த வெளிநாட்டில் வசிக்கும் காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, மோசடியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதன் பின்னர்,
அவரை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். அங்கு இடம்பெற்ற விசாரணைகளை அடுத்தே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts