யாழ்.நாவலர் வீதியில் புகையிரதக் கடவையின் அருகிலுள்ள பாரிய பள்ளத்துக்குள் நாளாந்தம் பெருமளவான வாகனங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன.
புகையிரதப் பாதையின் கீழாக வாய்க்கால் அமைக்கும் பொருட்டு பாரிய பள்ளம் தோண்டப்பட்டது. புகையிரத பாதை அமைக்கப்பட்ட பின்னர், தோண்டப்பட்ட பள்ளம் முழுவதுமாக மூடப்படவில்லை. இதனால் வீதியின் அருகில் பாரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால் அதன் அருகில் செல்லும் வாகனங்கள் சறுக்கி பள்ளத்துக்குள் வீழ்கின்றன. துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் செல்பவர்கள் அடிக்கடி வீழ்வதுடன், சில வேளைகளில் பெரிய வாகனங்களும் வீழ்ந்துள்ளன.